Followers

Tuesday, September 2, 2014

நோக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் என்னிடம் பேசும்பொழுது ஜாதககதம்பத்தின் அடிப்படை விசயம் பணம் என்று தான் நினைக்கிறேன் என்று சொன்னார்.

முதலில் நான் சொல்லுவதை புரிந்துக்கொள்ளுங்கள். பொதுவாக இதனை படிப்பவர்கள் அனைவரும் இல்லறவாசிகள். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு பணம் நிறைய வேண்டும் அவர்களின் தேவைகள் பூர்த்தியாகும்பொழுது மட்டுமே அவர்களால் அடுத்த இலக்கை அடையமுடியும்.

நீங்கள் ஞானம் அடையவேண்டும் என்றால் முதலில் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கவேண்டும். இந்தியாவில் தவறாக வறுமையை ஆன்மீகம் என்று சொல்லிவிட்டார்கள். அவர் அனைத்தையம் துறந்துவிட்டார் என்று பிச்சைக்காரனை எல்லாம் மகான் ஆக்கிவிட்டார்கள். என்றைக்கும் வறுமை ஆன்மீகம் ஆகாது.

முதலில் பணத்தை நன்றாக சம்பாதிக்க நிறைய தகவல்களை உங்களுக்கு கொடுப்பேன். அதில் நீங்கள் நிறைவு அடைந்துவிட்டால் அதன் பிறகு ஞானக்கருத்தை கொடுக்கலாம்.

பிற இடங்களில் நீங்கள் சென்று சோதிடம் பார்ப்பதை விட என்னிடம் நீங்கள் ஆலோசனை பெறுவது மிக குறைந்த பணமாகவே இருக்கும். அதனால் அடிப்படை உங்களை செல்வந்தராக மாற்றிவிட்டு பிறகு ஞானக்கருத்து வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.



No comments: