Followers

Sunday, September 21, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      சக்தியைப்பற்றி நிறைய செய்திகளை பார்த்துவருகிறோம். நண்பர் பரமேஸ் கூட சக்தியைப்பற்றி நிறைய எழுதுங்கள் என்றார். எங்களைப்போல் உள்ள இளைஞர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

ஆன்மீகத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் சாமியார்கள் அனைவரும் சொல்லும் வார்த்தை காமம் மற்றும் கோபத்தை தொலைத்தால் மட்டுமே ஆன்மீகம் என்பார்கள். என்னை பொறுத்தவரை இதனை நான் ஏற்றுக்கொள்வதில்லை. காமம் மற்றும் கோபம் இந்த இரண்டும் மிகப்பெரிய சக்தி. 

என்னிடம் தொழில் வழியில் ஆன்மீக உதவியை செய்பவர்களிடம் நான் சொல்லும் வார்த்தை உங்களிடம் இந்த இரண்டு சக்தியும் இருந்தால் நான் செய்வது உங்களுக்கு உடனே நடக்கும். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு உடனே நடைபெறாது என்று சொல்லுவது உண்டு.

காமம் மற்றும் கோபம் இல்லாதவன் சாதிக்கவே முடியாது. இந்த இரண்டையும் உடையவர்கள் இந்த உலகத்தில் சாதிப்பார்கள். அதிகப்பட்ச காமத்தை உடையவர்கள் சாதிப்பது மாதிரி சாதாரணவர்கள் சாதிக்க முடியாது.

உங்களிடம் அதிகம் காமம் மற்றும் கோபம் இருந்தால் நீங்கள் எளிதில் வெற்றியை நோக்கி செல்வீர்கள். இதனை பயன்படுத்தும் வித்தையை நீங்கள் அறிந்துக்கொண்டால் போதும்.

இரண்டில் ஒன்று இருக்கிறது என்று நீங்கள் தெரிந்துக்கொண்டால் உடனே நீங்கள் செய்ய வேண்டிய வேலையில் முழு கவனத்தையும் ஈடுபடுத்தி செய்யுங்கள். உடனே அந்த வேலை வெற்றி அடைந்துவிடும்.  மிகப்பெரிய சக்திகளில் இந்த இரண்டும் இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Pudhumaiyana padhivu arumaiyana padhivu.thanks sir