Followers

Monday, September 22, 2014

பரிகாரம் ஏன் வேலை செய்யவில்லை?


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று ஒரு நண்பர் என்னை சந்திக்கும்பொழுது சொன்னார். ஆன்மீகவாதிகள் நிறைய பேர் நிறைய கருத்தை சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்து மற்றும் அவர்கள் சொல்லுகின்ற பரிகாரங்களை எல்லாம் செய்து பார்த்தால் ஒன்றும் நடைபெறவில்லையே சார் எதனால் என்று கேட்டார்.

இவர்கள் சொல்லும் கருத்து எல்லாம் புத்தகங்களில் இருந்து படிப்பதால் ஒன்றும் நடைபெறுவதில்லை என்று அவரிடம் சொன்னேன். புத்தங்களில் இருந்து படிக்கும் செய்தி வைத்து பரிகாரம் செய்தால் ஒன்று நடைபெறாது. 

ஒவ்வொரு பரிகாரமும் அனுபவத்தில் இருந்து எடுத்து செய்தால் மட்டுமே அந்த பரிகாரம் வேலை செய்யும். என்னுடைய பரிகாரம் அதிகபட்சம் தொழில் செய்பவர்களுக்கு மட்டும் செய்கிறேன். நான் செய்கின்ற பரிகாரம் அவர்களின் ரிசல்ட் வைத்து தான் எனக்கு பணம் வரும் அப்படி இருக்கும்பொழுது எனது பரிகாரம் தோல்வியை சந்தித்தால் எனக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துவிடும்.

ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்து செய்கின்ற பரிகாரம் கண்டிப்பாக வெற்றி பெறும். படிக்கும் விசயம் வேறு. சூட்சமும் என்பது வேறு. சூட்சமத்தில் ஒரு உயிர் போல் அதனோடு உறவாடமுடியும். ஒரு மனிதனை பற்றி நாம் படிக்கலாம் ஆனால் அவனை நேரில் சந்திக்கும் பொழுது மட்டுமே அவனின் உண்மையான இயல்பு என்ன என்று தெரியும். சூட்சம உலகத்தில் போக தெரிந்தவனுக்கு மட்டும் தான் பரிகாரத்தில் வெற்றியை தரமுடியும்.

எனக்கு தெரிந்த வரை பரிகாரம் என்ற முறையில் ஏமாற்றம் தான் நடைபெறுமே தவிர அதில் உண்மையாக விசயம் நடைபெறுவதில்லை. மனரீதியாக நிறைய பிரச்சினை மக்களுக்கு ஏற்படும். அதனை எளிதில் தீர்த்துக்கொள்ள வழியை மட்டும் ஆன்மீகவாதிகள் செய்வார்கள். இதனை பார்த்து மக்கள் இவர் நல்ல பரிகாரம் செய்கிறார் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். உண்மையில் சூட்சம உலகத்தோடு தொடர்புக்கொள்பவர்களிடம் வித்தை இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.




1 comment:

KJ said...

Sir,
Suppose, a person have financial problem, he have to pray Dhanakaragan or 2nd house owner. If Dhanakaragan is enemy for 2nd house owner, then whom native has to follow.

Generally person has to concentrate on karagan or owner of that house.