Followers

Monday, September 1, 2014

மரணத்தை தள்ளி போடமுடியும்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் என்னிடம் கேள்வி கேட்டார். நாம் செய்யும் பரிகாரம் வழியாக மரணத்தை தள்ளிப்போடலாமா என்று கேட்டார்.

நமக்கு வரும் மரணத்தை நமது ஜாதகம் வழியாக நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். மரணத்தை தரும் கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெறும் காலத்தில் நாம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ஏழாவது வீட்டு கிரகத்தின் அல்லது அதிபதியின் நிலையை நன்கு கண்டுக்கொள்வது அவசியம். அதற்கு பிறகு தான் பிற கிரகங்களின் தாக்குதல் இருக்கும். எந்த கிரகம் நமக்கு கண்டத்தை கொடுக்கும் என்று பார்த்துக்கொண்டு அதற்கு பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்.

கிரகத்தைப்பற்றி முழுமையாக நாம் அறியமுடியவில்லை என்றால் பொதுவாக மரணத்தை தள்ளிப்போடும் கோவிலுக்களுக்கு சென்று வணங்கி வரலாம். அதுவும் நல்ல பலனை தரும்.

விதியை வெல்லமுடியுமா என்று நினைக்கவேண்டாம். உலகத்தில் உள்ள கோவில்கள் கட்டியதற்க்கு காரணம் மனிதனுக்கு தேவையானவற்றை அவன் கோவில்கள் வழியாக பெற்றுக்கொள்ளமுடியும் என்பதற்க்காக மட்டுமே.

நம்பிக்கையோடு வணங்கிவரலாம். கிரகங்களுக்கு சாந்தி செய்வது ஒரு வழியாக இருந்தாலும் ஒரு சிலர் கிரகங்களை எதிர்த்து வழிப்பாட்டை செய்வார்கள். அந்த வழியுலும் நல்ல முன்னேற்றத்தை காணமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

கிரகங்களை எதிர்த்து வழிப்பாட்டை செய்வார்கள்..please explain about this and how we can do that prayer against Grahas?