Followers

Tuesday, September 2, 2014

தற்கொலைக்கு தூண்டிவிடும் கிரகம்


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் ஒரு நண்பர் ஒன்றை தெரிவித்தார். அவரின் அம்மா நல்ல ஆன்மீகவாதியாக இருந்தார். எந்த நேரமும் ஆன்மீக சிந்தனையோடு இருப்பார். கடந்த ஆறு மாதத்திற்க்கு முன்பு அவர் தூக்கிலிட்டு இருந்துவிட்டார் என்று சொன்னார்.

நாம் என்ன தான் ஆன்மீகவாதியாக இருந்தாலும் கிரகங்கள் நம்மை துரத்திக்கொண்டு தான் இருக்கும். கிரகங்களுக்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டு ஆன்மீகப்பணியில் இருந்துக்கொள்ளலாம். நாம் ஆன்மீகவாதி என்பதற்க்காக கிரகங்கள் விட்டுவிடாது. கிரகங்களுக்கு ஒரு வணக்கம் வைத்தால் மட்டுமே நம்மை விடும்.

அவருக்கு ராகு தசா சுயபுத்தியில் தற்கொலை செய்துக்கொண்டார் என்ற தகவலும் சொன்னார். ராகு தசாவைப்பற்றி பழைய பதிவில் நிறைய கருத்து எழுதியிருக்கிறேன். அதனை எல்லாம் படித்தால் ராகு தசாவில் ஒரு எச்சரிக்கை உங்களுக்கு ஏற்படும்.

ராகு தசாவில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ராகு மற்றும் கேது தற்கொலைக்கு அதிகமாக தூண்டிவிடும் கிரகம். மனதில் ஒரு கலகத்தை ஏற்படுத்திவிட்டு இதனை செய்யும். முடிந்தவரை நான் சொல்லியுள்ள பரிகாரங்கள் எல்லாம் செய்துக்கொள்ளுங்கள்.

ராகு கேது லக்கினத்தில் சம்பந்தப்பட்டால் கண்டிப்பாக இப்படி தற்கொலை எண்ணம் தோன்றும். ராகு கேது சந்திரனோடு தொடர்புக்கொண்டாலும் இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: