Followers

Sunday, September 28, 2014

பிரபஞ்ச தத்துவம்


வணக்கம் நண்பர்களே!
                    தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை பார்த்துவிட்டு என்னை தொடர்புக்க்கொண்டு பிரச்சினை இல்லாமல் இருக்கிறீர்களாக என்று கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு முறை சென்னையில் புயல் என்று சொன்னவுடன் நான் அந்த புயலை பார்க்க பெசன்ட் நகர் பீச்சிற்க்கு சென்று இருந்தேன். எவ்வளவு பெரிய ஆபத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு அதில் அமைதி அடையமுடியுமா என்று பார்ப்பதற்க்கு அப்படி செய்தேன். அதே நேரத்தில் மிகுந்த விழிப்புணர்வோடு அந்த இடத்தில் இருப்பேன். அதே நேரத்தில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்றும் நினைப்பேன்.

நேற்றும் பிரச்சினை என்று சொன்னவுடன் உடனே வெளியில் கிளம்பி சென்று பார்த்தேன். ஒரு பிரச்சினையும் இல்லை கடைகள் மட்டும் சாத்தி வைத்து இருந்தார்கள். வேறு ஒன்றும் பெரிய அளவில் இல்லை. மாலை நேரத்தில் நீண்ட தூரத்திற்க்கு நடந்து சென்று பார்த்தேன். எனக்கு தெரிந்த வரை ஒன்றும் நடைபெறவில்லை.

ஒரு நிகழ்ச்சியை மாறி மாறி தொலைக்காட்சியில் பார்க்கும்பொழுது அந்த நிகழ்ச்சி ஏதோ பெரிய பிரச்சினை மாதிரி மனதிற்க்கு தெரியும். மனதளவில் மக்களை தயார் செய்யும் ஒரு யுத்தி அது. 

ஒவ்வொரு நாளும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது அதே நேரத்தில் நாம் பிரபஞ்சத்திற்க்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை என்றால் இந்த பிரபஞ்சம் நம்மை காக்குமே தவிர அழிக்க நினைக்காது. அது பிரபஞ்ச தத்துவம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: