Followers

Wednesday, September 3, 2014

சோதனை வேண்டாம்


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் பேசும்பொழுது நிறைய நண்பர்கள் என்னை பற்றி தான் கேட்பார்கள். இது எதனால் என்று சிந்தித்து பார்த்தால் இவர்கள் வந்த வேலையை விட்டுவிட்டு என்னையை சோதிக்க நினைக்கிறார்கள்.

ஆன்மீகத்தை தான் பார்க்கவேண்டும் ஆன்மீகவாதியைப்பற்றி பார்க்ககூடாது. நமக்கு என்ன கிடைக்கும் என்று பார்த்துவிட்டு அத்தோடு வந்துவிட வேண்டும். அந்த காலத்தில் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்ககூடாது என்பார்கள்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் ஜாதககதம்பத்தின் பதிவுகளை எல்லாம் எடுத்து அவரின் நண்பருக்கு அனுப்பி இவர் நல்லவரா கெட்டவரா என்று கேட்டாராம். எனக்கு அவரை நினைத்து பாவமாக தான் இருந்தது. இவர்கள் வந்த வேலை என்ன அதனை விட்டுவிட்டு என்னை சோதிக்க வேண்டிய வேலை எதற்கு என்று நினைத்தேன்.

உங்களிடம் எல்லாம் சொல்லுவது நான் சொல்லுவதை எடுத்து உங்களை பரிசோதனை செய்து பாருங்கள். உங்களுக்கு ஏற்றுக்கொள்வதாக அது இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையா அப்படியே விட்டுவிடுங்கள். 

நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு ஆன்மீகவழியில் என்ன கிடைக்கிறது என்று பாருங்கள். அதனை மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிடுங்கள். ஆன்மீகவாதியை சோதனை செய்ய ஆரம்பித்தால் உங்களின் கதி அவ்வளவு தான். ஒரு நாளும் நீங்கள் முன்னேற்றம் அடையவே முடியாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Neenga nallavara? Kettavara? Velu naayakkar madhiri ayitteengale.