Followers

Saturday, September 20, 2014

ஆன்மீகம் முதல் தகுதி


வணக்கம் நண்பர்களே!
                      வாரத்திற்க்கு ஒரு நபராவது என்னை சந்தித்து எனக்கு ஆன்மீகம் கற்றுக்கொடுங்கள் என்று கேட்பார்கள். அப்படி என்ன நாம் எழுதிவிட்டோம் இவர்கள் என்னை தேடி வந்து ஆன்மீகம் கற்றுக்கொடுங்கள் என்று கேட்கிறார்களே என்று நினைப்பது உண்டு.

முக்கால்வாசி பேர் இதனை வைத்து காசு பார்க்கலாம் என்று நினைத்து தான் வருகிறார்கள். காசு பார்க்கவேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை ஆனால் அதே நேரத்தில் நாம் ஒரு தொழிலை செய்தால் அந்த தொழிலை சுத்தமாக செய்யவேண்டும் என்ற நோக்கம் இருக்கவேண்டும்.

முதலில் குருவை நாடி செல்ல வேண்டும். அந்த குருவிற்க்கு என்ன தேவை என்று புரிந்துக்கொண்டு அவர்க்கு நீங்கள் உதவவேண்டும். பெரும்பாலான குரு தனிமையில் தான் இருப்பார்கள். வேலைக்கு செல்லமாட்டார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டும். 

நான் கற்ற நேரத்தில் கூட என்னால் முடிந்த உதவியை பணமாக கொடுத்து வந்தேன். அந்த நேரத்தில் எனது வருமானத்தில் வரும் பணத்தை எடுத்து என்னால் முடிந்தளவு கொடுத்தேன். அவர்களின் வேலை பிரபஞ்சத்தை பற்றி ஆய்வு செய்வது அவர்களால் வேலைக்கு செல்லமுடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் இந்த உதவி மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

முதலில் நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இது தான். பணத்தை கையில் வைத்துக்கொண்டு குருவை நாடுங்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்துவிட்டால் அவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு கற்று தருவார்கள்.

நான் எந்த ஒரு ஆன்மீகவகுப்புகளும் எடுப்பதில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். பிறரை நாடுங்கள்.

தற்காலிகமாக இலவச சோதிட சேவை நிறுத்தப்படுகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: