Followers

Thursday, September 25, 2014

கேட்டால் கிடைக்கும்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு ஆன்மீகவாதியும் அவர் அடைந்த ஒன்றை எடுத்த விசயத்தை அடுத்தவர்களுக்கு கொடுத்தவிட்டு தான் செல்வார்கள். இன்றைக்கு பல பேர் என்னிடம் ஆன்மீகம் கற்றுக்கொடுங்கள் கேட்பவர்கள் அனைவரும் இதனை புரிந்துக்கொள்ளவேண்டும்.

தாவோவில் இருப்பவர்கள் தனக்கு சீடர்கள் அமையவில்லை என்றால் ஏதாவது ஒரு மரத்திடம் தான் அடைந்த விசயத்தை சொல்லிவிட்டு செல்வார்களாம். பிற்காலத்தில் அந்த மரத்தில் இருந்து ஞான விசயத்தை பிற்காலத்தில் இருப்பவர்கள் கேட்டு தெரிந்துக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இன்றைய காலத்தில் பல பேர் சித்தர்களின் சமாதிக்கு தேடிச்செல்கின்றனர். அப்படி செல்லும்பொழுது நீங்கள் அங்கு வேண்டிக்கொள்வது எனக்கு ஒரு நல்ல ஆன்மீக ரகசியங்கள் கிடைக்கவேண்டும் அதற்கு வழி செய்து தாருங்கள் என்று கேட்டாலே உங்களை தேடி ஆன்மீகம் வந்துவிடும்.

எல்லைற்ற ரகசியங்களை கொண்டுள்ள பல கோவில்கள் இருக்கின்றன அவைகள் அனைத்தும் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது. நீங்கள் சென்று கேட்டாலே அதுவாக கிடைத்துவிடும்.

அனைவரும் இனிமேலாது ஒவ்வொரு கோவில்கள் மற்றும் சித்தர்களின் கோவிலுக்கு செல்லும்பொழுது இதனை கேளுங்கள். உங்களுக்கு கண்டிப்பாக கொடுத்தவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

This is a useful information for us, thank u for your guidance sir.