Followers

Thursday, September 25, 2014

ஏழில் குரு வாழ்க்கை மாறும்


வணக்கம் நண்பர்களே!
                      கோச்சாரப்படி குரு கிரகம் ஏழில் நிற்க்கும்பொழுது அந்த ராசிக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரும் நேரமாகவே அது இருக்கும். 

கோச்சாரப்பலன் குறைவாக தான் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் ஒரு சிலருக்கு கோச்சாரப்படி நல்ல நேரமும் வரும். அப்படிப்பட்ட ஒன்று தான் குரு கிரகம் ஏழில் வரும் காலம் நன்மையை அதிகம் கொடுக்கும்.

ஒருவருக்கு திருமண வாழ்க்கை என்பது அவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரும். ஏழில் நிற்க்கும் குரு ஒருவருக்கு எப்படியும் திருமண வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பார். திருமணவாழ்க்கை அமைந்தால் வாழ்க்கை மாறிவிடும் அதனை தான் ஏழில் நிற்க்கும் குரு தருவார்.

மகரராசிக்கு இப்பொழுது ஏழில் குரு நிற்கிறார். மகரராசியினர் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பொன்னான வாய்ப்பு உங்களை தேடிவரும். திருமண ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

திருமணம் முடிந்தவர்களுக்கு புதிய தொழில் தொடங்க அல்லது வீட்டில் ஏதாவது ஒரு விஷேசம் நடைபெறவைப்பார். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சிறிய முயற்சி செய்தால் அது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: