Followers

Saturday, September 27, 2014

நான்கில் சனி சுகம் கெடும்


வணக்கம் நண்பர்களே!
                      என்ன தான் தசாநாதன் வலுவாக இருந்தாலும் ஒரு சில நேரத்தில் தசாநாதனை மீறி கோச்சாரத்தில் வரும் தீயகிரகங்கள் கெடுதலை தந்துவிடுவது பல ஜாதகத்தில் நான் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு மனிதனும் சுகமாக வாழவேண்டும் என்று தான் நினைப்பான். நமக்கு கிடைக்கும் சுகத்தை நாம் அறிவது ஜாதகத்தில் நான்காவது வீட்டை பொறுத்து தான் கிடைக்கும். நான் நான்காவது வீட்டை வைத்து ஒருத்தர் நன்றாக வாழ்வாரா அல்லது கெட்டுபோவார என்பதை பழைய பதிவில் சொல்லியுள்ளேன்.

கோச்சாரப்படி சனிக்கிரகம் நான்காவது வீட்டிற்க்கு வரும்பொழுது அவர்களின் சுகம் கண்டிப்பாக கெடும். வீட்டை காட்டும் இடமாகவும் இருப்பதால் வீட்டை விட்டு வெளியேற்றி வைத்துவிடும். கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இப்பொழுது சிம்ம ராசிக்கு நான்காவது வீட்டிற்க்கு சனிக்கிரகம் வரப்போகிறார். வந்துவிட்டார் என்றே வைத்துக்கொள்ளுங்கள் அர்த்தாஷ்டமசனியை சிம்மராசி எதிர்க்கொள்ள வேண்டும். கொஞ்சம் பார்த்து அனைத்து வேலையும் செய்யுங்கள். 

நாம் என்ன செய்வது இப்பொழுது நாம் செய்த தவறுக்கு பிரச்சினை வந்தாலும் சூட்டோடு அனுபவித்துவிடலாம். எப்பொழுதோ செய்த தவறுக்கு இப்பொழுது பிரச்சினை வரும்பொழுது நமக்கு அது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடும். 

சனிக்கு என்று நான் சொன்ன பரிகாரத்தை செய்து வாருங்கள். குறிப்பாக  சூப் பற்றி பழைய பதிவில் சொல்லியுள்ளேன். உடலுக்கு மிகவும் நல்லது. மிக நல்ல பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: