Followers

Wednesday, September 24, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      செல்வவளத்திற்க்கு என்று ஒரு சாப்பிடும்பொருளை தருகிறேன் என்று சொல்லிருந்தேன். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். ஒரு சிலர் என்னை தொடர்புக்கொண்டு பேசும்பொழுது எப்படி சார் இது சாத்தியப்படுமா என்று கேட்டார்கள்.

கண்டிப்பாக இது நல்ல வேலை செய்யும் என்பது என்னிடம் இருக்கும் வாடிக்கையாளர்களை வைத்தே சொல்லிவிடமுடியும். முதன் முறையாக தமிழ் நண்பர்களுக்கு இதனை தருகிறேன். இதுவரை என்னிடம் தொழில் செய்பவர்களுக்கு என்று செய்துக்கொடுத்த பொருளை பல பேர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்க்காக ஜாதககதம்பத்தில் இணைத்து இருக்கிறேன்.

அற்புதமான ஒரு விசயத்தை நான் கொடுத்து இருக்கிறேன். என் மீது நம்பிக்கை இருப்பவர்கள் வாங்கி பயன்படுத்தி கொள்ளுங்கள். இது போல் பல தேவைகளுக்கு என்று பல பொருள்களை தயார் செய்து என்னிடம் தொழில் செய்யும் நண்பர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறேன். நேரம் வரும்பொழுது ஜாதககதம்பத்தில் அதனைப்பற்றி வெளியிடுகிறேன்.

ஏன் இப்படி செய்கிறேன் என்றால் உங்களின் உடல் சரியில்லை என்றால் எதுவும் செய்துவிடமுடியாது. ஆன்மீகம் மற்றும் பொருளாதாரத்தில் நீங்கள் வெற்றி பெறமுடியாது என்பதால் இப்படி செய்து தருவது உண்டு. 

எப்படி இது எல்லாம் உங்களால் தயார் செய்யமுடிகிறது என்றால் நான் படித்த ஆன்மீகம் அப்படிப்பட்டது. சொல்லிக்கொடுத்தவன் சாதாரணமானவன் கிடையாது. அனைத்தையும் அறிந்த ஒரு ஞானியிடம் நான் கற்றேன். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதைப்பற்றி எல்லாம் எழுதிக்கொண்டு இருக்கமுடியாது அதற்கு என்னிடம் நேரம் இல்லை. 

தொழில் செய்பவர்கள் உடல் முடியவில்லை என்று படுத்துவிட்டால் என்ன செய்வது அதனால் அவர்களுக்கு என்ன என்ன தேவை என்பதை பார்த்து செய்துக்கொடுத்துக்கொண்டே இருப்பேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: