Followers

Wednesday, September 3, 2014

கிரகங்களின் பலன்


வணக்கம் நண்பர்களே!
                    பாபக்கிரகங்களில் இருந்து வரும் தீயபலன்கள் பெரும்பாலும் தேய்பிறையில் தான் வரும். நன்றாக இதனை கவனித்து பார்த்தால் தெரியும். சோதிடம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அதனை நாம் கவனிக்கும்பொழுது மட்டுமே தெரியும்.

நாம் சோதிடத்தை புத்தங்களில் படித்து மட்டும் தெரிந்துக்கொள்ளவேண்டிய ஒன்று கிடையாது. அதனை நாம் அனுபவத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டும்.

தீயகிரகங்கள் எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்பதை நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.தேய்பிறையில் தீயகிரகங்களின் ஆட்டம் அதிகமாகவே இருக்கும்.நல்ல கிரகங்களின் ஆதிக்கம் வளர்பிறையில் இருக்கும்.

நாம் மாதத்தை வளர்பிறை மற்றும் தேய்பிறை என்று பிரித்து வைத்துக்கொண்டு அந்த நேரத்தில் நமது முக்கியமான தேவைகளை எல்லாம் வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு நல்ல செயல் நடைபெறும்பொழுது அதனை வளர்பிறையில் வைத்துக்கொண்டால் நல்லது.

ஒரு சிலருக்கு தேய்பிறை தான் நல்ல பலனை தரும். அவர்களின் ஜாதகத்தில் தீயகிரகங்கள் அதிக வலுப்பெறும்பொழுது அப்படி பலனை தரும். இவர்களுக்கு என்ன தான் வளர்பிறையில் நல்ல காரியங்கள் செய்தாலும் உருப்படாது. தேய்பிறையில் செய்தால் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

Sir Ji..
How to predict "Paba" Giragam from the horoscope ?

Pushparaj