Followers

Monday, September 1, 2014

ஊனமும் புதனும்


வணக்கம் நண்பர்களே!
                    மனிதன் பிறப்பில் எத்தனையோ அதிசயங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரையும் தனித்தன்மையோடு இறைவன் படைக்கிறான். ஒரு சிலர் அதனை புரிந்துக்கொண்டு செயல்படுகின்றனர். ஒரு சிலர் அதனை புரிந்துக்கொள்வதில்லை.

ஒரு மனிதனை உடல் ஊனம் இல்லாமல் படைத்தாலே அவன் இறைவனை நன்றாக வணங்கவேண்டும். இந்த உடலை ஊன் இல்லாமல் படைத்தற்க்கு நன்றி இறைவா என்று சொல்லவேண்டும். 

பொதுவாக நான் ஒரு சில ஊனமுற்றோர்களை பார்த்து இருக்கிறேன். அவர்கள் கடவுள் மேல் கோபமாக இருப்பார்கள். ஏன் என்னை மட்டும் இப்படி படைத்திருக்கிறார் கடவுள் என்று ஒரு வித கோபத்தோடு இருப்பார்கள். நல்ல உடல் உறுப்புகளை பெற்றவர்கள் கடவுளுக்கு நன்றி சொல்லுகின்றார்களா என்று கேட்டால் அது சந்தேகமே.

உடல் ஊனத்தில் ஒரு வகை கை மற்றும் கால்கள் பெரிய அளவில் வளர்ச்சி காண்பது. கைகள் பெரிய சையில் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு என்ன கிரகநிலையிலால் இது நடக்கிறது என்று இப்பொழுது பார்க்கலாம்.

புதன் கிரகம் லக்கினத்திற்க்கு ஐந்து மற்றும் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து மற்ற கிரகங்கள் வலுகுன்றி அமைந்தால் அந்த நபருக்கு கை மற்றும் கால்கள் இரண்டு மடங்கு வளர்ச்சியை கொடுக்கும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: