Followers

Sunday, September 21, 2014

சூரியன்


வணக்கம் நண்பர்களே!
                    எந்த ஒரு பரிகாரம் செய்தாலும் முதலில் நீங்கள் சூரியனுக்கு செய்த பிறகு செய்யுங்கள். ஏன் என்றால் சூரியனுக்கு செய்த பிறகு அடுத்த கிரகத்திற்க்கு செய்யும்பொழுது எந்த வித தடைகள் இல்லாமல் நீங்கள் பரிகாரம் செய்யலாம்.

சூரியனுக்கு பரிகாரம் என்று சொன்னவுடன் அவருக்கு பெரிய அளவில் எல்லாம் செய்ய தேவையில்லை. உங்களால் முடிந்தால் ஒரு தீபம் ஏற்றலாம் அல்லது வீட்டிற்க்கு வெளியில் வந்து காலை பொழுதில் நீங்கள் சூரியனை பார்த்து வணங்கலாம்.

சிம்ம ராசியை உடையவர்கள் தினமும் சூரியனை பார்த்து வணங்கிவரலாம். சூரியன் உதிப்பதற்க்கு முன் எழுந்து சூரியனை வரவேற்று வணங்கிவரலாம். பொதுவாக அனைத்து ராசியினரும் அதிகாலை தான் எழுந்து வணங்கி வருவது நல்லது.

ஆத்மா காரகன் என்று சொல்லப்படும் சூரியனை வணங்கிவருவதால் ஆத்மா பலன் நன்றாக இருக்கும். அதிகாலையில் எழும்பொழுது மட்டுமே ஆத்மா பலம் பெறும். அதிகாலை எழுந்து சூரியனை வணங்கிவாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: