Followers

Monday, September 15, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                      நான் எத்தனையோ பேருக்கு நல்லது செய்துக்கொடுத்து இருக்கிறேன். என்னிடம் வந்த பெரும்பாலும் நண்பர்கள் நல்ல வாழ்க்கையை பெற்று இருக்கிறார்கள் என்றால் அது அத்தனையும் அம்மனின் அருள் இன்றி வேறு ஒன்றும் இல்லை.

மனிதர்கள் போல் ஒரு மிகப்பெரிய பயங்கரமானவன் இந்த உலகத்தில் கிடையாது என்றே சொல்லலாம். நான் ஒவ்வொருவரிடமும் சொல்லும் வார்த்தை என்னிடம் வந்தால் உங்களுக்கு வேண்டியதை அம்மனை வைத்து கொடுத்துவிடுவேன். அதனை பெற்று மேலும் மேலும் முன்னேறி செல்லவேண்டும் என்று சொல்லிவிடுவேன்.

மனிதர்கள் என்ன செய்வார்கள். நான் அம்மனை வைத்து செய்தவுடன் ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்களுக்கு நல்லது நடக்கும் அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு அத்தோடு என்னை மறந்துவிடுவார்கள்.அனைத்தையும் தொலைத்த பிறகு தான் என்னை தொடர்புக்கொள்வார்கள்.

இந்த கலியுகத்தில் அம்மனை தவிர வேறு எந்த தெய்வமும் இப்படி வாய்ப்பை கொடுக்கும் என்று நான் பார்த்தில்லை. அப்படிப்பட்ட தெய்வத்தின் முழுஅருளையும் நீங்கள் பெறவேண்டும் என்றால் தொடர்ந்து என்னை தக்க வைத்துக்கொள்ளவேண்டும்.

பயன் அடைந்த பிறகு ஓடிவிட்டால் மறுபடியும் எப்படியும் நீங்கள் திரும்பி வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்பொழுது அம்மன் உங்களிடம் அவ்வளவு எளிதில் வந்துவிடாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Bro amman mattumalla ellaa theyvamum berum karunai udayathu thane?