Followers

Thursday, September 18, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மனை வைத்து வேலை செய்தாலும் ஒவ்வொருவரின் கர்மாவின் படி தான் அம்மனின் வேலையும் ஒரு சில நேரங்களில் இருக்கும். என்னிடம் ஒரு நண்பர் வெளிநாட்டில் ஒரு வேலை வேண்டும் என்று கேட்டு ஒவ்வொரு அம்மனின் பூஜைக்கும் பணம் அனுப்பிக்கொண்டிருந்தார்.

அவர் குறைந்தது நான்கு அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பி கடைசியில் அவருக்கு அந்த வேலை கிடைத்தது. மூன்று முறை அனுப்பிவிட்டு நான்காவது முறை என்னிடம் சொன்னார். சார் எனக்கு இன்று தான் இண்டர்வியூ எப்படியாவது இதில் வெற்றி அடைந்துவிட அம்மனிடம் எனக்காக வேண்டுதல் வையுங்கள் என்று கேட்டார்.

அவரின் வேண்டுதல் என்னிடம் சொல்லும்பொழுது நான் வேறு வேலையாக இருந்தேன். என்னடா இவர் பல முறை அம்மனின் பூஜைக்கு என்று பணம் அனுப்பியுள்ளார் இதுவரை நடக்கவில்லையே என்று நினைத்தேன்.வேலையில் இருந்தாலும் அம்மனிடம் ஒரு நிமிடம் வேண்டுதல் வைத்தேன். 

சரியாக அந்த முறை அவருக்கு அவர் கேட்டது கிடைத்தது. ஒரு சில நேரங்களில் அம்மன் இப்படி தான் வேலையை செய்துக்கொடுக்கும். அவரின் கர்மகணக்கை தீர்த்துவிட்டு அவருக்கு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு சிலருக்கு பல தடவை நடையாக நடந்தால் மட்டுமே அவருக்கு நடைபெறும். பல கோவில்களில் கூட இப்படி தான் நடைபெறும். ஒரு காரியம் நடைபெறவில்லை என்றால் இந்த கோவில் சரியில்லை என்று ஒதுங்கிவிடாதீர்கள். அனைத்தும் நமது கர்மாவின் வேலை தான் இப்படி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Thalaradha muyarchikku kadavul karunai kattuvaarthaane sir?