Followers

Thursday, September 25, 2014

நேர்மையான வழியை கடைபிடிப்போம்


வணக்கம் நண்பர்களே!
                      நான் ஒரு சில நேரங்களில் எனது முகநூலை பார்க்கும்பொழுது நிறைய மாந்தீரிக சைட் பற்றி வரும் அதனை கிளிக் செய்து பார்த்தால் ஒரே மாந்தீரிக சம்பந்தமான விசயங்களை புத்தகங்களில் இருந்து எழுதியதை பார்ப்பேன். 

அந்த முகநூலில் முக்கால் வாசி நமது நண்பர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஏன் இப்படி எல்லா விசயத்திலும் நுழைக்கிறார்கள் என்று மட்டும் தெரியவில்லை. பொதுவாக நான் சொல்லுவது எந்த ஒரு விசயத்தையும் நேர்மையாக இருந்து அதில் வெற்றி பெறவேண்டும். பல தளங்களை பார்க்கும்பொழுது அது கண்டிப்பாக நம்பகதன்மையற்றதாக இருக்கிறது.

என்னிடம் வாருங்கள் என்று சொல்லவில்லை நீங்கள் தவறான வழியை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று மட்டும் சொல்லுவேன். நாம் நேர்மையான வழியில் செல்லவேண்டும். அப்படி சென்றால் மட்டுமே நமது வாரிசுகள் மற்றும் நமது குடும்பம் நல்ல நிலையில் இருக்கும்.

அம்மனை வைத்து நான் பல வேலைகள் செய்தாலும் அது நேர்மையான வழியில் நான் சென்றால் மட்டுமே அம்மன் எனக்கு உதவும் அப்படி இல்லை என்றால் அம்மன் உதவாது. ஏன் என்றால் நேர்மைக்கு மட்டுமே தெய்வம் துணை நிற்க்கும்.

நமது சித்தர்கள் எத்தனையோ நல்ல விசயங்களை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். நம்ம ஆட்கள் தவறான வழியில் சித்தர்களை பற்றி சொல்லிக்கொண்டுள்ளனர். சித்தர்களின் மாந்தீரிகம் என்று தான் பல தளங்களில் நான் பார்த்து இருக்கிறேன். இது அனைத்தும் தவறான ஒன்று. தவறான ஒன்றுக்கு துணை போகாதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: