Followers

Wednesday, September 17, 2014

சிறப்பு சலுகை நிறைவு நாள்


வணக்கம் நண்பர்களே!
                      சிறப்பு சலுகைகளை அறிவித்தால் தான் வியாபாரம் நடைபெறுகிறது. அதுபோல் ஆன்மீகத்திலும் சிறப்பு சலுகைகளை அறிவித்தால் தான் கல்லா கட்ட முடிகிறது. இரண்டாயிரம் பதிவை தந்த சந்தோஷத்தில் ஒரு சிறப்பு சலுகையை அறிவித்து இருந்தேன்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அம்மனை வைத்து அருள செய்வது என்ற சிறப்பு சலுகை தான் அது. அந்த அறிவிப்பை படித்துவிட்டு நமது நண்பர்கள் வழியிலும் மற்றும் நேரிடையாகவும் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு அதில் இணைந்தார்கள். அனைவருக்கும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். 

சிறப்பு சலுகையில் அவர்கள் செலுத்தும் பணம் அவர்களுக்கு நடைபெறவில்லை என்றால் முழுவதையும் திருப்பி தருகிறேன் என்று சொல்லிருந்தேன்.இந்த சலுகை வரும் 19.09.2014 வெள்ளிக்கிழமையோடு முடிவு அடைகிறது. இதுவரை தொடர்புக்கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பல ஏழை மக்கள் இதில் பயன் அடைவார்கள். பணம் இருப்பவர்களிடம் இருந்து வாங்கி ஏழை மக்களுக்காக பூஜை செய்யப்படுகிறது. வரும் நாளில் எனது வியாபாரத்தில் இருந்து வரும் பணத்தில் ஏழை மக்களுக்கு இந்த ஏற்பாடு செய்து தரப்படும்.

ஏறக்குறைய பத்து நாட்கள் வெளியில் இருந்து இன்று சென்னை திரும்பிவிட்டேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.