Followers

Monday, September 22, 2014

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைக்கு எனக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது. பழைய நண்பர்கள் எல்லாம் என்னிடம் தொடர்புக்கொண்டு பேசினார்கள். ஏன் பேசினார்கள் என்று மட்டும் கேட்காதீர்கள்.

ஒரு ஆன்மீகவாதி தொழில் செய்பவர்களுக்கு உதவுகிறேன் என்று வரும்பொழுதே என்னைப்பற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஒரே நாளில் அனைத்தையும் உங்களுக்கு செய்துவிடுவேன் என்று எதிர்பார்க்ககூடாது. 

ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் ஏன் சார் இதனை இரண்டு வருடத்திற்க்கு முன்பே என்னிடம் சொல்லி இருக்கலாமே இப்படி ஒரு பொருள் இருக்கிறது என்று கேட்டார். கடைசி வரை நான் ஒரு புரியாத புதிராக இருந்தால் மட்டுமே என்னை தேடி வந்துக்கொண்டே இருப்பீர்கள்.

ஒரு நாளில் அனைத்தையும் கொட்டிவிட்டு நான் அம்போ என்று உட்காரமாட்டேன். நீங்கள் எவ்வளவு உயரம் சென்றாலும் கடிவாளம் என்னிடம் மட்டுமே இருக்கும்.

என்னிடம் கடைசிவரை இருப்பவர்களுக்கு மட்டும் அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்கும். கடைசி வரை எனக்கு பணம் கொடுப்பது மாதிரி தான் வைத்திருப்பேன். 

பணம் அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறி உள்ளவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள். வந்தால் என்னை விடாமல் துரத்திக்கொண்டு வாருங்கள். உலகத்தில் உள்ள அனைத்து நல்ல விசயங்களும் உங்களை தேடி வரும்.

கடைசியாக சொல்லுவது நான் நல்ல வேலைக்காரன். புத்திசாலியாக இருந்தால் பயன்படுத்துக்கொள்ளுங்கள். இல்லை ஜாதககதம்பத்தை மட்டும் படித்துக்கொண்டு இருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.