Followers

Monday, October 6, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு சிலரின் ஆத்மசக்தியின் பலம் அதிகமாக இருக்கும். அதாவது ஒரு சில ஞானிகள் நினைத்தால் அவர்களால் மழையை வரவழைக்க முடியும். மழையை நிறுத்த முடியும்.

இந்த பிரபஞ்சத்தில் உங்களின் ஆத்மாவின் சக்தி என்பது மிகப்பெரியது அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்றே சொல்லமுடியும். ஒவ்வொருவரின் ஆத்மாவின் பலம் என்ன என்று அவர்களால் உணரமுடியவில்லை அது மட்டும் தான் பிரச்சினையாக இருக்கிறது.

ஆத்மாவின் சக்தி பெரிது என்று உணர்ந்தவர்களுக்கு அதனை செயல்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை. உண்மையில் ஆத்மாவின் சக்தி மிகப்பெரியது அதனை வலுப்படுத்த பல வேலைகள் செய்தால் போதும் கண்டிப்பாக பெரியது என்பதை உணரமுடியும்.

பழைய காலத்தில் எல்லாம் ஒரு சில சாமியார்கள் ஒரு சில ஊர்களுக்கு செல்லும்பொழுது அந்த ஊரில் மழை இல்லை என்றால் அவரின் வலிமையால் மழையை வரவழைக்க முடியும். அதே நேரத்தில் ஒரு ஊரில் அதிகமாக மழை பெய்துக்கொண்டு வெள்ளம் செல்லும்பொழுது மழையை நிறுத்தவும் செய்வார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

தற்பொழுதும் ஒரு சில ஞானிகள் இருக்ககூடும். என்ன என்றால் இவர்கள் அனைவரும் யாருக்கும் தெரியாமல் இருக்கின்றார்கள். கண்டிப்பாக இவர்கள் நினைத்தால் மழையை வரவழைக்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: