Followers

Friday, October 3, 2014

செல்வவளம்


வணக்கம் நண்பர்களே!
                      செல்வவளத்திற்க்கு என்று ஒரு கருத்தை பார்க்கலாம். ஒரு ஆண் என்ன தான் ஓடி ஓடி வேலை செய்தாலும் வீட்டில் இருக்கும் பெண் ஒழுங்காக இல்லை என்றால் அவனால் எந்த காலத்திலும் செல்வந்தராக வரமுடியாது.

பெண்கள் அதிகம் செலவு செய்ய விரும்புவார்கள். அதனை தவிர்த்து அவரின் கணவனுக்கு உதவியாக அதாவது அவனை இயக்கும் சக்தியாக இருந்தால் பத்து வருடத்தில் உள்ள வளர்ச்சியை ஒரே வருடத்தில் அந்த ஆண் மகனால் எடுக்கமுடியும்.

ஆணை இயக்கும் சக்தியாக பெண் இருக்கும்பொழுது ஆணால் எளிதில் வெற்றியை பெறமுடியும். ஒரு பணக்காரனாக வேண்டும் என்றால் முதலில் அவனின் வீட்டை சரி செய்யவேண்டும் என்று அடிக்கடி எனது தொழில் செய்பவர்களிடம் சொல்லுவேன்.

உங்களின் வீட்டில் தேவையற்ற செலவை குறைத்தாலே போதும். அவனால் விரைவில் செல்வந்தராக முடியும். பழைய பதிவில் நான் சொன்ன அனைத்து கருத்தையும் பின்பற்றி வந்தால் போதும்.

செல்வந்தராக ஆகவேண்டும் என்று நான் சொன்ன மருந்திற்க்கு ஜாதககதம்பத்தில் வரும் முக்கால்வாசி பேர் விண்ணப்பித்து உள்ளார்கள். என்னால் மூலிகைப்பொருள்களை சேகரிக்கமுடியவில்லை. முடிந்தளவு சேகரித்து வைத்த மூலிகையை கொண்டு முதலில் வந்தவர்க்கு கொடுத்துவிடுகிறேன். பிறகு வரும் நபர்களுக்கு பார்த்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: