Followers

Monday, October 6, 2014

இன்றைய சோதிட நிலைமை


வணக்கம் நண்பர்களே!
                      இப்பொழுது பார்த்தால் தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலையை வைத்து நமது சோதிடர்கள் அனைவரும் அவர்களுக்கு தெரிந்ததை சொல்லிவருகிறார்கள். இந்த நிலையை ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்று பார்த்தால் நமது சோதிடர்களின் உண்மையான பலன் சொல்லும் யுக்தி என்ன என்று தெரிந்துவிடும்.

நான் பலமுறை உங்களிடம் சொல்லியுள்ளேன். எனக்கு தெரிந்ததை வைத்து பலனை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரளவுக்கு தான் சோதிடம் தெரியும் என்றும் உங்களிடம் ஒழிவு மறைவின்றி சொல்லியுள்ளேன். முழுமையான பலன் சொல்லுவது என்பது கடினமான ஒன்று. அதனை செய்ய நல்ல சேவை மனப்பான்மை வேண்டும்.

இந்த நிலையை வைத்து பார்க்கும்பொழுது சோதிடம் என்றாலே நடந்த பிறகு தான் எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள் என்ற தவறான கண்ணோட்டம் இருக்கும்.

சோதிடம் எப்பொழுதும் பொய்யாகாது. சோதிடம் சொல்லும் மனிதனின் கணக்கு தவறாக போய்விடுகிறது. சோதிடத்தை ஒரு தெய்வீக பணி என்று சொல்லும் காலத்தில் கண்டிப்பாக அனைத்து கணக்கும் சரியாக வரும். என்ன செய்வது சோதிடர்களின் நிலை சரியில்லாமல் இருக்கிறது. நான் பலியை தூக்கி கடவுள் மேல் போட்டுவிடவேண்டியது தான்.

உண்மையாக சோதிடம் சொல்லவேண்டும் என்றால் நாம் செய்யும் இந்த பணியில் பணம் என்பதை வாங்கவே கூடாது. சேவையாக சொல்லும் இடத்தில் கண்டிப்பாக சோதிடம் பொய்க்காது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: