Followers

Friday, October 31, 2014

குலதெய்வ வழிபாடு


வணக்கம் நண்பர்களே!
                      ஆத்மாவைப்பற்றி எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. இப்பதிவில் பார்க்கலாம். ஒருவரின் வீட்டில் ஆத்மாவின் தொந்தரவு இருந்தால் அந்த வீட்டில் இருப்பவர்கள் நிம்மதியாக இருக்கமுடியாது. 

இறந்தவர்களின் ஆத்மா அந்த வீட்டில் தங்கி வரும் நபர்களுக்கு பிரச்சினையை கொடுத்துக்கொண்டே இருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு தான் இந்த பிரச்சினை இருக்கும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு எப்பொழுதாவது யாராவது வழியாக வீட்டிற்க்குள் துர் ஆத்மாக்கள் நுழைய வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் தொடர்ச்சியாக வீட்டில் தீபம் ஏற்றி வழிப்பட்டு வந்தால் பிரச்சினை இருக்காது. ஒரு சில நாட்கள் வழிபாடு நடத்தாமல் இருந்துவிட்டால் கூட வீட்டில் துர்ஆத்மாக்கள் நுழைந்துவிடும் ஆபத்து இருக்கிறது. நீண்ட நாட்கள் வழிபாடு இல்லாமல் நடத்தாமல் இருந்தால் வீட்டில் நீங்கள் மறுமுறை நீங்கள் வழிபாடு நடத்த துவங்கும்பொழுது அந்த பூஜையை நடத்தவிடாமல் துர்ஆத்மாக்கள் தடையை ஏற்படுத்தும். 

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது தொடர்ச்சியாக குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள். பச்சைப்பரப்புதலை தொடர்ச்சியாக கடைபிடியுங்கள். மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை நீங்கள் பச்சைப்பரப்புதல் செய்தாலே போதும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

No comments: