Followers

Saturday, October 4, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைக்கு நிறைய பேருக்கு பிரச்சினை அதிகம் வருவதற்க்கு காரணம் கோவில்களில் அவர்கள் செய்யும் தவறு ஒன்று மட்டுமே.

கோவில்களுக்கு செல்லும்பொழுது உங்களின் பிரச்சினையை அங்குள்ள கருவறையில் இருக்கும் சக்தியிடம் சென்று சொன்னால் அந்த சக்தி அந்த பிரச்சினையை அதிகப்படுத்துமே தவிர உங்களின் பிரச்சினையை தீர்க்காது.

நமது பிரச்சினையை பலிபீடத்திலேயே சொல்லிவிட்டு உள்ளே செல்லும்பொழுது அமைதியாக சென்று தரிசனம் செய்துவிட்டு வந்துவிடவேண்டும். நமக்கு சக்தியை அங்குள்ள சக்தி கொடுக்கும்.

நாம் எல்லாம் உள்ளே சென்று நமது பிரச்சினையை அங்கு சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. இதனால் வரை நீங்கள் சொல்லிக்கொணடு இருந்தாலும் இனிமேல் இப்படி செய்யாதீர்கள்.

பிரபஞ்ச சக்தியிடம் நாம் பிரச்சினையை சொன்னால் அந்த பிரச்சினை பலமடங்காக நமக்கு திரும்பிவந்துவிடும். இதனால் தான் நமது நமது மக்களுக்கு அதிகமாக பிரச்சினை வருகிறது.

நமக்கு என்ன தேவை நமக்கு என்ன கொடுக்கவேண்டும் என்பது அந்த பிரபஞ்ச சக்திக்கு தெரியும். நாம் கேட்டு பெற தேவையில்லை.

இப்படி ஏகாப்பட்ட விசயங்கள் இருக்கின்றன அதனை எல்லாம் என்னை சந்திக்கும்பொழுது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment: