Followers

Sunday, October 5, 2014

இளைஞர்களுக்கு வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                      இதுவரை செல்வவளத்திற்க்கு ஐந்து பேர் மட்டுமே கொடுத்து இருக்கிறேன். மீதி உள்ளவர்களுக்கு பிறகு பார்க்கலாம். தற்பொழுது ஐந்து பேர் மட்டும் போதுமானது. 

இளைஞர்கள் என்னை தேடிவரும்பொழுது ஒரு விசயம் தெரியவருகிறது. ஆன்மீகம் என்று பல பேர் அழைவது தெரியவருகிறது. ஆன்மீகத்திற்க்கு இளைஞர்கள் வருவது நல்லது ஆனால் அதற்க்காக அவர்கள் நிறைய இழந்துவிடுகிறார்கள் என்பதும் தெரியவருகிறது. ஆன்மீகத்திற்க்கு வகுப்பு என்று எடுப்பவர்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை கற்றுக்கொடுக்கமுடியாது.

இளைஞர்களுக்கு சொல்லுவது எல்லாம் ஒரு மனிதனை முதலில் நம்புவதை விட கடவுளை நம்பி தேடுதலை ஆரம்பியுங்கள். கலியுகத்தில் ஒரு நல்ல குரு கிடைப்பது மிகவும் கடினம். 

ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று பலிபீடத்தில் எனக்கு ஒரு நல்ல குருவை காண்பித்து கொடு என்று கேட்டால் கண்டிப்பாக உங்களின் வேண்டுதலை ஏற்று ஒரு நபரை காண்பித்துக்கொடுப்பார்.

இயற்கையாகவே உங்களுக்கு ஒரு நல்ல குருவை கடவுள் கொடுப்பார். பணத்தை கொடுத்து குருவை விலைக்கு வாங்கமுடியாது. உங்களின் அற்பணிப்பை ஏற்று உங்களுக்கு குரு அமையமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: