Followers

Friday, October 31, 2014

இயற்கையான இடம்


வணக்கம் நண்பர்களே!
                       சொந்த ஊரில் இருந்து இன்று திருப்பூர் வந்துவிட்டேன்.கடந்த சில நாட்களாக பதிவை தொடர்ந்து தரமுடியவில்லை. எனது சொந்த வேலை இருந்தது இடையில் மதுரை சென்று வந்தேன். பல நண்பர்கள் ஏன் பதிவை தொடர்ந்து எழுதுவில்லை என்று போன் செய்து கேட்டார்கள். சொந்த வேலை மட்டும் தான் காரணம்.

அம்மன் கோவிலில் தினமும் பிராத்தனை செய்தேன். ஒரு சில பூஜைகளும் செய்தேன். என்னை புதுப்பித்துக்கொள்ளவும் இந்த இடைவெளி நன்றாக எனக்கு இருந்தது. 

எப்பேர்ப்பட்ட ஆன்மீகவாதியும் சென்னையில் தொடர்ந்து இருந்தால் அவர் கொஞ்ச காலத்தில் அவரின் ஆன்மீகசக்தி கீழே சென்றுவிடும். ஏன் என்றால் சூடு இருக்கும் இடத்தில் ஆின்மீகம் வேலை செய்வது கடினம். அப்படி இருந்தும் அந்த ஊரில் பல வருடங்கள் இருந்தேன். எப்படிப்பட்ட நிலையிலும் ஆன்மீகத்தில் இருக்கமுடியும்.

பொதுவாக இயற்கையான இடத்தில் இருந்துக்கொண்டு தான் நீங்கள் முதல் முதலில் ஆன்மீக பயிற்சிகளை எடுக்கவேண்டும். இயற்கையில் இருந்து ஆன்மீகப்பயிற்சி எடுக்கும்பொழுது உங்களின் மனம் அதற்கு இணைந்துக்கொடுக்கும். இனிமேல் ஆன்மீகப்பயிற்சியை நீங்கள் எடுத்தால் இயற்கையான இடங்களுக்கு செல்லுங்கள். இயற்கை மிக உன்னதமான விசயத்தை உங்களுக்கு கற்றுக்கொடுக்கும்.

காேயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால என்னை தொடர்புக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் திருப்பூரில் இருப்பேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

No comments: