Followers

Monday, October 6, 2014

சந்திரன்


வணக்கம் நண்பர்களே!
                      நாம் என்ன தான் ஒவ்வொரு கிரகத்தையும் பார்த்து பயந்தாலும் அதாவது பெரிய கிரகத்தை பார்த்து பயந்தாலும் சந்திரன் மாதிரி ஒருவருக்கு நல்லதும் கெட்டதும் செய்வது போல் வேறு கிரகம் செய்யாது.

சந்திரனை வைத்து தான் அனைத்து கிரகங்களும் வேலையை காட்டும். ஒருவருக்கு கஷ்டம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம் அவர் மிகப்பெரிய கஷ்டத்தை மனதளவில் தான் முதலில் நடக்கும். மனதை போட்டு கொன்றுவிடும். மனதிற்க்கு காரகன் வகிக்கும் சந்திரனை நாம் முதலில் சாந்தப்படுத்தினால் போதும். எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் நாம் தாங்கிவிடலாம்.

சந்திரனை எப்படி சாந்தப்படுத்துவது நான் பழைய பதிவில் சொல்லிருப்பேன் அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.சந்திரனை பிற கிரங்கள் பாதிப்பதால் தான் சந்திரன் நமக்கு பிரச்சினை கொடுக்கிறது. அப்படி இருந்தால் பாதிக்கும் கிரகத்தை முதலில் சாந்தப்படுத்தவேண்டும். இப்படி ஒவ்வொன்றாக பிடித்து போனால் ஏகாப்பட்ட கிரகத்தை நாம் சாந்தப்படுத்த வேண்டிவரும்.

பொதுவாக ஒரு பரிகாரத்தை மட்டும் செய்துக்கொண்டு அனைத்து கிரகத்தையும் சாந்தப்படுத்தினால் மிகவும் எளிதாக அனைத்தும் சாந்தப்படுத்தமுடியும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது விடியற்காலையில் எழுந்து சாந்தப்படுத்தினால் மிக எளிது. என்ன விடியற்காலையில் எழுந்து செய்தால் போதும். அனைத்து பிரச்சினையும் தீர்ந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: