Followers

Friday, October 10, 2014

கர்மா விலக


வணக்கம் நண்பர்களே!
                      கர்மத்தை தொலைத்தால் தான் நாம் முன்னேற்றம் என்ற அடியை வைக்கமுடியும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஜாதககதம்பத்தில் கர்மத்தை தொலைக்க நான் நிறைய விசயங்களை சொல்லிக்கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் ஒரு கருத்தை பார்க்கலாம்.

நான் ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்தியபொழுது எனது குரு கோவில்களுக்கு என்னை அழைத்து செல்லவில்லை மாறாக காடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டு சென்றார். ஏன் அப்படி என்னை அழைத்து சென்றார் என்று நான் அவரிடமும் கேட்கவில்லை. நானே பல முறை சிந்தித்து இதனை கண்டுபிடித்தேன்.

இன்றைய காலத்தில் நகர்புறத்தில் இருக்கும் கோவில்கள் எல்லாம் ஒரு விதத்தில் தன்னுடைய சக்தியை இழந்து வருகின்றன. அதற்கு காரணம் மக்கள் செய்யும் தவறுகள். அதனைப்பற்றி பேச இப்பொழுது நேரம் இல்லை நேரடியாக கருத்துக்கு செல்வோம்.

காடுகளுக்கு எனது குரு அழைத்து சென்றாலும் எனக்கு கொடுத்த பயிற்சி மிகவும் ரகசியமானதாகவே இருந்தன. அதற்க்காக அவர் காடுகளை தேர்ந்தெடுத்தாலும் நான் கண்டுபிடித்தது காடுகளில் இருக்கும் மூலிகைகள் மனிதனின் கர்மத்தை தொலைப்பதில் அதிவேகமாக வேலை செய்யும் என்பதை அறிந்தேன்.

காடுகளுக்கு செல்லும் வழியில் உள்ள மூலிகைகள் தன்னுடைய தெய்வீக தன்மையை கொண்டு மனிதனின் கர்மாவை தொலைக்கிறது. அதே நேரத்தில் காடுகளில் உள்ள கோவில்களை நாம் வழிபடும்பொழுது நமக்கு பல மடங்கு சக்திகளை தருகிறது.

நீங்கள் செல்வவளத்தில் முன்னேற்றம் மற்றும் நல்ல வாழ்க்கையை அமையவேண்டும் என்றால் முதலில் நீங்கள் காடுகளில் உள்ள கோவில்களை வணங்கிவாருங்கள். காடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பிவாருங்கள். காடுகளில் கோவில்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை பல நல்ல மூலிகைகள் இருக்கும் காட்டிற்க்கு சென்று வரும்பொழுது நமக்கு நல்ல விசயம் நடைபெறும்.

காடுகளுக்கு செல்லும்பொழுது தகுந்த ஏற்பாடு மற்றும் பாதுகாப்பாேடு சென்று வாருங்கள் நண்பர்களே.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: