Followers

Saturday, October 11, 2014

சனி என்ற நீதிமான்


வணக்கம் நண்பர்களே!
                    சமீபத்தில் திருப்பூர் சென்று இருந்தபொழுது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அதுவும் நாட்டுநடப்பைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அவர் சொன்னார் சனிக்கிரகம் ஒருவருக்கு வலுத்து இருந்தால் அவர் நேர்மையானவராக இருப்பார் என்றார்.

ஒருவருக்கு சனிக்கிரகம் வலுத்து இருந்தால் அவரிடம் நீங்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே அவரிடம் நீங்கள் பழககூட முடியும். அவரை நீங்கள் என்ன விலை கொடுத்தாலும் வாங்கவே முடியாது.

நான் இப்படிப்பட்ட நண்பர்களின் ஜாதகத்தை பார்த்து இருக்கிறேன். அவர்கள் நேர்மையானவராக இருப்பார்கள். எதாவது காரியம் செய்ய கீழே இறங்கி வாருங்கள் என்று கேட்டால் கூட அவர்கள் நான் எல்லாம் அப்படி செய்யமுடியாது அவன் என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்ளட்டும் நான் இப்படி தான் இருப்பேன் என்பார்.

அரசாங்க வேலையில் ஒரு சிலர் இப்படி கூட இருக்கிறார்கள். அவர்கள் யாரிடமும் வலைந்து போகமாட்டார்கள். சனி கிரகம் பாேல் நீதி தவறாமல் செய்வது வேறு கிரகம் கிடையாது என்றே சொல்லவேண்டும். தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக நீதியாக செய்யகூடிய ஒரே கிரகம் சனிக்கிரகம் மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: