Followers

Friday, October 31, 2014

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய மாதத்தில் பதிவுகள் குறைந்த காரணத்தால் ஒரு சில நண்பர்கள் என்னிடம் பூஜை செய்வீர்களா என்று கூட கேட்டார்கள். எனது ஊரில் நெட் இணைப்பு கிடைக்கவில்லை அது மட்டும் தான் காரணம். நெட் இருந்து இருந்தால் தொடர்ச்சியாக பதிவு வந்துக்கொண்டு இருந்திருக்கும்.

ஜாதககதம்பம் இல்லாத நேரத்தில் கூட எனக்கு கிடைத்த பொருளை வைத்து பூஜை செய்து இருக்கிறேன். அதனால் எந்த காரணத்தாலும் பூஜை நிறுத்த மாட்டேன். தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

எப்பேர்பட்ட சூழ்நிலையில் நீங்கள் வாழ்ந்தாலும் அம்மனை நினைக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள். திக்கற்றவர்களுக்கு அம்மன் கண்டிப்பாக வழி வெட்டுவாள். பல இக்கட்டனா சூழ்நிலையில் நான் வாழ்ந்து வந்து இருக்கிறேன். அப்பொழுது எல்லாம் என்னிடம் இருந்தது அம்மன் மேல் உள்ள நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கையை வைத்த காரணத்தால் மட்டுமே இன்று உங்களுக்கு ஜாதக கதம்பத்தை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

அம்மன் நமக்கு நல்லது செய்யும் என்று நம்பிக்கையை வையுங்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு வந்து நமது அம்மன் உங்களுக்கு உதவுவாள்.இது நான் கண்ட உண்மை.

இந்த மாதம் பூஜை அடுத்த வாரத்தில் நடைபெறும் நமது அம்மனிடம் வேண்டுதல் வைத்து அது நடைபெற்று இருந்தால் வேண்டுதலுக்கான உங்களின் காணிக்கையை செலுத்தலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

No comments: