Followers

Tuesday, November 18, 2014

விழிப்புணர்வு


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொருவரும் கிரகங்களின் பிடியில் தான் இருக்கிறோம். கிரகங்கள் நன்மை செய்யும்பொழுது அதனை தூக்கி கொண்டாடுகிறோம். அதே நேரத்தில் கிரகங்கள் கெடுதல் செய்யும்பொழுது அதனை திட்டியும் தீர்க்கிறோம். 

ஒவ்வொரு கிரகங்களும் நமக்கு கெடுதல் செய்வதற்க்கு முன்பு ஒரு சின்ன தகவலை நமக்கு இறைவன் கொடுப்பான். அந்த தகவலை நாம் விழிப்புணர்வு இல்லாத நிலையில் இருப்பதால் அதனை புரிந்துக்கொள்வதில்லை.

எதாவது ஒரு கிரகம் நமக்கு தீங்கு செய்வதற்க்கு முன்பு நமக்கு விழிப்புணர்வு இல்லாத நிலை ஏற்படும். தூக்கம் வருவது போல் இருக்கும். அந்த இடத்தில் தான் நமக்கு பிரச்சினையை கிரகங்கள் கொடுக்கும். பல இடங்களில் இதனை நீங்களே கவனித்து பார்த்து இருக்கலாம். கண் சிமிட்டும் நேரத்தில் நடக்கும் என்பார்கள். கண் மூடுவது போல் ஒரு மயக்கம் ஏற்பட்டு பிரச்சினை கொடுத்துவிடும்.

ஒவ்வொரு கிரகங்களும் நம்மை தாக்காமல் இருக்கவேண்டும் என்றால் முதலில் நாம் விழிப்புணர்வை மேம்படுத்தும் செயலில் இறங்கவேண்டும்.தினசரி கடவுள் வழிபாடு மற்றும் மந்திரங்கள் ஜெபிப்பது நல்ல பலனை தரும்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

No comments: