Followers

Wednesday, November 19, 2014

அறிவு என்கின்ற செல்வம்


வணக்கம் நண்பர்களே!
                      மனிதனுக்கு எந்தளவுக்கு அறிவு இருக்கின்றதோ அந்தளவுக்கு அவன் செல்வவளத்தை பெறமுடியும். அறிவை சேகரித்தால் பணத்தை எளிதாக சேமித்துவிடலாம். நமக்கு ஒவ்வொரு விசயத்திலும் அறிவு இல்லாத காரணத்தால் தான் நாம் அந்த துறையில் வெற்றி பெறமுடியவில்லை என்பது முதல் காரணியாக இருக்கமுடியும்.

அதிர்ஷ்டம் இருக்கவேண்டும் அதே நேரத்தில் அந்த துறையில் நாம் அறிவோடு இருந்து வேலை செய்தால் நமக்கு கடவுள் எளிதில் வெற்றிக்கொடுத்துவிடுவார். பல பேர் ஏழையாக இருப்பதற்க்கு காரணம் முதலில் அறிவை பெறாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கும்.

நமக்கு ஒரு அறிவு என்றால் அதுவும் மிக புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று நினைத்தால் புதன்கிரகம் உங்களுக்கு நல்ல முறையில் ஜாதகத்தில் அமையவேண்டும். 

நல்ல அறிவை கொடுத்தால் மனிதன் கஷ்டப்படமாட்டான் என்று நினைத்து தான் பெரும்பாலும் புதன்கிரகத்தை கடவுள் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கெட்டு போக வைத்திருப்பார். 

புதன் நன்றாக இருந்தால் அனைவரும் அதிபுத்திசாலியாக இருப்பார்களே. அப்படி மக்கள் இருக்ககூடாது என்பதற்க்காக தான் புதனை கெடு வைத்துவிட்டார். அவர் கெடுத்தால் என்ன நாம் சும்மா விட்டுவிடுவோமா அதற்கு பரிகாரம் சொல்லுகிறேன் செய்து பாருங்கள்.

உங்களுக்கு அறிவு குறைவாக இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் எந்த தெய்வத்தை வணங்கி வந்தாலும் சரி அந்த தெய்வத்தை புதன்கிழமையில் நீங்கள் வணங்கி வந்தால் போதும். உங்களுக்கு நல்ல அறிவை அந்த தெய்வம் கொடுத்து உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள துணைபுரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: