Followers

Monday, November 3, 2014

அம்மன் வழியாக வெற்றி கிடைக்க


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு ஏதாவது ஒன்றை உடனே செய்துக்கொடுங்கள் என்று கேட்பார்கள். அதாவது எந்த வேலையும் செய்யாமல் அதுவாகவே நடக்கவேண்டும் என்று கேட்பார்கள்.

எந்த ஒரு வேலையும் அதுவாகவே நடந்துவிடாது. நாம் அதற்க்காக முயற்சி செய்துவிட்டு அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் நடக்கும். நமது உழைப்பை கொடுத்துவிடவேண்டும் அதன் பிறகு விடையை எதிர்பார்த்தால் அனைத்தையும் வெற்றியாக முடித்துக்கொடுத்துவிடலாம்.

கடவுளோடு வேலையோ அவன் அந்த வேலையை ஒழுங்காக செய்து இருக்கிறானா என்று தான் பார்ப்பார். ஒழுங்காக செய்துவிட்டால் கண்டிப்பாக எப்படியும் அவனுக்கு வெற்றியை கொடுத்துவிடுவார்.99 சதவீதம் உழைப்பை கொடுத்துவிட்டு 1 சதவீதம் வந்தால் சக்சஸ் என்று இருக்கும்பொழுது வெற்றி கிடைக்கும்.

நிறைய பேர்கள் என்னிடம் வந்து உடனே ஏதாவது செய்துக்கொடுப்பார் என்று எதிர்பார்த்துவிட்டு அது நடக்கவில்லை என்றால் உடனே சென்றுவிடுவார்கள். அவர்களை பற்றி நான் கவலைக்கொள்வதில்லை காரணம் என்ன என்றால் அவர்கள் வேலையே செய்யவில்லை பிறகு எப்படி வெற்றி கிடைக்கும்.

இனிமேலாவது வருபவர்கள் அனைத்து வேலையும் செய்துவிட்டு வெற்றி எப்படியும் வரவேண்டும் என்று நினைத்து வந்தால் எளிதில் நாம் கொடுத்துவிடலாம். இப்படி வருபவர்களுக்கு அம்மன் கண்டிப்பாக வெற்றி கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: