Followers

Tuesday, November 18, 2014

பூர்வபுண்ணியம்


வணக்கம் நண்பர்களே!
                      நம்மைப்போல் இருக்கும் பிற மனிதனையே நாம் மதிக்காதபொழுது நாம் கடவுளை எப்படி வழிபட முடியும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆத்மா என்பது ஒரு இடத்தில் இருந்து தான் வந்தது சதை மட்டும் மாறி உள்ளது.  ஆன்மீகத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் அனைவரும் இதனை உணர்ந்தவர்கள் தான் நாம் இதனை உணரவில்லை.

பூர்வபுண்ணிய வீட்டில் ராகு அமைந்தவர்கள் அனைவரும் தன்னோடு முன் ஜென்மத்தில் பிறந்த வெளிநாட்டி்னவரை அல்லது பிற சாதியில் உள்ளவரோடு ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்வார்கள். இது நண்பர்களாக இருக்கலாம் அல்லது மனைவியாக இருக்கலாம்.

ஐந்தில் ராகு அமைந்தவர்களுக்கு எல்லாம் வெளிசாதியினர் அல்லது வெளிநாட்டினர் வழியாக உதவி வரும். அப்படி உங்களுக்கு உதபவர்கள் தான் உங்களின் முன்ஜென்மத்தில் உங்களோடு நெருக்கத்தில் உள்ளவர்கள் அதாவது தொடர்பில் உள்ளவர்கள் என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்.

நம் ஆட்கள் தான் இந்த ஜென்மத்தில் உள்ளவர்களையே காலி செய்பவர்களாயிற்றே இதில் முன்ஜென்மத்தில் உள்ளவர்களோடு அன்போடு இருக்கபோகின்றார்கள்.முன்ஜென்மத்தில் ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கும் அவர்களுக்கும் பிரச்சினை இருந்து இருக்கலாம் அது இந்த ஜென்மத்திலும் தொடரும் சண்டை சச்சரவை விட்டுவிட்டு அவர்களோடு இருக்கும்பொழுது உங்களின் வாழ்க்கை மேம்மைப்படும்.

அன்புடன்
 ராஜேஷ்சுப்பு

No comments: