Followers

Tuesday, November 18, 2014

பூர்வ புண்ணியம்


வணக்கம் நண்பர்களே!
                      எந்த வித வாய்ப்பும் ஒருவருக்கு வரவில்லை என்றால் அவர் அவரின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியாதிபதிக்கு சரியான முறையில் பரிகாரம் செய்யவேண்டும்.

உங்களின் ஜாதகத்தில் ஐந்தாவது வீடு உங்களின் முன்ஜென்மத்தைப் பற்றி காட்டும் வீடாக இருக்கிறது. ஐந்தாவது வீட்டு அதிபதியை வைத்தே உங்களின் முன்ஜென்மத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். 

முன்ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியம் இந்த ஜென்மத்திலேயே அனைத்தையும் கொடுத்துவிடாது. இந்த ஜென்மத்திற்க்கு கொஞ்சம் கிடைக்கும். மீதி உள்ளது எல்லாம் எடுக்க போகின்ற ஜென்மத்திற்க்கு கிடைக்கும்.

நமக்கு இந்த ஜென்மத்திற்க்கு கிடைக்கவேண்டிய புண்ணியம் அனைத்தும் தீர்ந்து போய்விட்டால் நமது புதிய முயற்சிகள் அனைத்தும் தோல்வி பெறும். இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும்பொழுது மனிதன் வாழ்க்கையில் தோல்வி அடைகிறான்.

இதற்கு என்ன செய்யலாம் என்று எனது குருவிடம் கேட்கும்பொழுது எனது குரு அவர்கள் சொன்ன கருத்து இது தான். மனிதனின் பூர்வபுண்ணிய கணக்கில் மீதி இருப்பதை இந்த ஜென்மத்திற்க்கு எடுத்து கொடு. அவன் முன்னேற்றம் அடைவான் என்றார்.

நாங்கள் அம்மனை வைத்து எடுத்துகொடுத்துவிடுவோம் நீங்கள் என்ன செய்ய முடியும். நீங்கள் உங்களின் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டு அதிபதியை நல்ல முறையில் வணங்கினால் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையிலும் முன்னேற்றம் அடையமுடியும்.

அன்புடன் 
 ராஜேஷ்சுப்பு

No comments: