Followers

Sunday, August 31, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                                                     காலையிலேயே பதிவை தந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். தவிர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு வெளியில் சென்றுவிட்டேன். திரும்பிவந்தவுடன் உங்களுக்கு பதிவை தந்துவிடவேண்டும் என்று ஆரம்பித்துவிட்டேன்.

என்னிடம் ஏதாவது ஒரு வேலையை செய்ய சொல்லி கேட்டால் நான் அம்மனை வைத்து தான் வேலையை வாங்குவேன். அப்படி அம்மனை எனது இடத்தில் இருந்து அனுப்பும்பொழுது நடக்கும் விசயம் மிகப்பெரிய விந்தை.

அம்மன் வந்தவுடன் மிகப்பெரிய அளவில் வெப்பம் உருவாகும். அந்த வெப்பம் நன்றாக கண்களுக்கு தெரியும். நாம் அதனை வெளியில் அனுப்பும்பொழுது அப்படியோரு வெப்ப அனலாக வெளியில் செல்லும். இதனை எனக்கு வீட்டிற்க்கு அருகில் உள்ளவர்களே பார்த்து இருக்கிறார்கள்.

நான் அவர்களிடம் சும்மா விளக்கு ஏற்றியதால் அனல் வெளியில் செல்லுகிறது என்று சொல்லுவேன். உண்மையில் அம்மன் வெப்பமாக வெளியில் செல்லும். அம்மனை நம்பினால் கண்டிப்பாக நமக்கு அது காட்டிக்கொடுக்கும்.

நல்ல நம்பிக்கையோடு இருந்து அம்மனை வணங்கினால் உங்களுக்கு அதுபோல் உதவி செய்வது வேறு எதுவும் கிடையாது. நமது பதிவில் வரும் நண்பர்களுக்கு அம்மனின் அருள் என்ன என்று தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Saturday, August 30, 2014

நீண்ட நாள்கள் வாழவேண்டுமா?


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு மனிதனுக்கும் நீண்ட நாள்கள் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்க்காக பல வழிகளை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். நிறைய வழிகள் இருந்தாலும் நான் சொல்லும் இந்த வழியை பின்பற்றி வாருங்கள். கண்டிப்பாக நீங்கள் நீண்ட நாட்கள் இந்த பூமியில் வாழலாம்.

சனிக்கிரகம் நமது ஆயுளை தரும் கிரகம். சனிக்கிரகத்தை கண்டு நாம் பயந்துக்கொண்டு இருக்கிறோம். அவரை நாம் மனதார எனக்கு நல்ல ஆயுளை தரவேண்டும் என்று கேட்கவேண்டும்.

முதலில் அவருக்கு நன்றியை சொல்லவேண்டும். இந்த பூமிக்கு என்னை கொண்டு வந்து இந்த உடம்பில் ஆத்மாவை பத்திரமாக வைத்திருப்பதற்க்கு நன்றி சொல்லவேண்டும்.

ஒவ்வொரு கிழமையும் கடவுளுக்கு கொடுத்த ஒரு அற்புதம் என்று தான் சொல்லவேண்டும். அதனை பயன்படுத்தும்பொழுது மட்டுமே அதனால் என்ன பயன் கிடைக்கிறது என்று நமக்கு தெரியும்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயை உடலில் தேய்த்து குளித்து வரவேண்டும். ஆயுள் முழுவதும் இதனை செய்து வரவேண்டும். கண்டிப்பாக உங்களுக்கு எந்த நோயும் வராது. நீண்ட ஆயுள் கிடைக்கும். நல்லெண்ணெய் என்றால் எள்ளில் இருந்து எடுக்கும் எண்ணெய்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Friday, August 29, 2014

கர்மகணக்கு


வணக்கம் நண்பர்களே!
                    வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பணகஷ்டம் இருக்கும் அதனால் நாம் கடன் பிறரிடம் வாங்குவோம். அந்த கடனை நாம் வாங்கியப்படி திருப்பிக்கொடுத்துவிடவேண்டும்.

நாம் ஒருவரிடம் ஐம்பது பைசா வாங்கிவிட்டு அந்த பணத்தை திரும்பிக்கொடுக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அன்று நாம் இறந்துவிட்டால் அந்த ஐம்பது பைசாவை திருப்பிக்கொடுப்பதற்க்காக நாம் திரும்பி பிறக்கவேண்டும்.

எந்த கடனையும் நாம் இங்கு வைத்துவிட்டு செல்லமுடியாது. அனைத்தையும் இங்கே தீர்த்துவிட்டு சென்றால் மட்டுமே இறைவனிடம் இடம் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் மறுபடி மறுபடி நீங்கள் பிறப்பு எடுத்துக்கொண்டே இருக்கவேண்டியிருக்கும்.

இன்றைக்கு பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுவது ஒரு வேலையாக பல பேர் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாக அடுத்த பிறப்பு எடுத்து படாதபாடு படவேண்டும்.

அவசரத்திற்க்கு பணம் நீங்கள் வாங்கினாலும் அந்த பணத்தை எவ்வளவு விரைவில் திருப்பிக்கொடுக்க வேண்டுமோ அவ்வளவு விரைவில் திருப்பிக்கொடுத்துவிடுங்கள். திருப்பிக்கொடுக்க காலம் அதிகம் தேவைப்பட்டால் அவரிடம் உண்மையான நிலவரத்தை சொல்லிவிடுவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

மும்பையும் விநாயகர் சதுர்த்தியும்


வணக்கம் நண்பர்களே!
                    விநாயகர் சதுர்த்தி இன்று இந்த பதிவை பகிர்ந்துக்கொள்கிறேன். விநாயகர் சதுர்த்தி பிரபலமாக கொண்டுடாடப்பட்டு வருகிறது. கொஞ்ச காலத்திற்க்கு முன்பு எல்லாம் இது அந்தளவுக்கு பிரபலம் ஆகவில்லை. இன்றைய கிராம புறங்களில் கூட படு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.

மகிழ்ச்சியாக இருப்பதற்க்கு ஒரு விழா கிடைத்து இருக்கிறது. விநாயகர் புராணம் எல்லாம் எனக்கு தெரியாது. எனது நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு தகவலை பரிமாறிக்கொண்டார். அந்த தகவலை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

மும்பையில் நல்ல மழை பெய்யும். அளவுக்கு அதிகமாக மும்பையில் மழை பெய்யும்பொழுது அதனை நிறுத்துவதற்க்கு விநாயகரை வழிப்பட்டு கடலில் போடுவது வழக்கம். தமிழ்நாட்டில் அடிக்கிற வெயிலுக்கு விநாயகரை கொண்டு சென்று போடுவதற்க்கு தண்ணீர் கூட இல்லை என்று சொன்னார். 

சாந்தமான கடவுளை சண்டை போடுவதற்க்கு மனிதன் பயன்படுத்திக்கொண்டான். மனிதன் மிகப்பயங்கரமானவன் என்பது இதில் இருந்தே தெரிகிறது. கடவுளை கூட மனிதன் விட்டுவைக்கமாட்டான். மேலே சொன்ன கருத்து உண்மையா அல்லது பொய்யா என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.

விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாடினால் நீங்களும் மகிழ்வோடு கொண்டாடலாம். பிற மதத்தவரும் அமைதியாக இருப்பார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


வணக்கம் நண்பர்களே!
                    இந்து மதத்தில் பண்டிக்கைக்கு குறைவு இல்லை. நிறைய பண்டிகைகளை வைத்திருக்கும் இரகசியம் அதன் வழியாக மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று நினைத்து வைத்திருக்கிறார்கள். 

இந்த பண்டிகைகள் இந்த காலத்திற்க்கு ஏற்ற ஒன்றா என்று கேட்டால் இது எல்லாம் வேண்டியதில்லை என்று நான் சொல்லுவேன். அப்படியே பண்டிகை கொண்டாடி தான் ஆகவேண்டும் என்று நினைத்தால் காலையில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கொண்டாடிவிட்டு அதன் பிறகு அலுவலகத்திற்க்கு அல்லது வேலையை பார்க்க சென்றுவிடவேண்டும்.

இன்றைய உலகம் அவசர உலகம் என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாமல் நமது நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்ககூடாது. ஒரு ஆன்மீகவாதியாக இருந்துக்கொண்டு இப்படி சொல்லுகிறாரே என்ற நீங்கள் நினைப்பீர்கள்.

ஆன்மீகம் என்ற பெயரில் நாம் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்க கூடாது என்பதால் இப்படி சொல்லுகிறேன். நமது அரசாங்கம் விடுமுறை விட்டே நமது நாட்டை காலி செய்ய நாமே காரணமாக இருக்ககூடாது.

தொடர்ச்சியாக வேலை செய்யும்பொழுது மட்டுமே ஒரு கம்பெனி அல்லது அரசாங்கம் நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். மக்களை சோம்பேறியாக மாற்றகூடாது.

நான் விடுமுறை காலத்தில் கூட ஜாதககதம்பத்தில் பதிவுகள் எழுதுவதற்க்கு காரணம் விடுமுறை என்பது இருக்ககூடாது என்று நினைக்கிறேன். மக்களை சோம்பேறி ஆக்குவது அது ஆன்மீகமாக கூட இருக்ககூடாது என்று நான் நினைக்கிறேன். 

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Thursday, August 28, 2014

ஜாதகபலனும் சூழ்நிலையும்


வணக்கம் நண்பர்களே!
                      நமது பதிவுகளை படிக்கும் இளம் சோதிடர்களுக்கு ஒரு சின்ன அறிவுரையை வழங்குகிறேன். இன்றைக்கு அனைவருக்கும் சோதிட ஞானம் நிறைய இருக்கிறது. புத்தகம் மற்றும் நெட் வழியாக நிறைய விசயங்களை படித்து வைத்திருக்கிறீர்கள்.

ஒரு தொழில்முறை சோதிடர்களாக மாறுவதற்க்கு முதல் தகுதி அவர்கள் பல பேர்களின் ஜாதகத்தை அவர்களின் இடத்திற்க்கு சென்று பலனை சொல்லிருக்கவேண்டும். சரி இதனை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை நான் சொல்ல பாேகிற இந்த விசயத்தை கடைபிடித்து வாருங்கள். விரைவில் நல்ல சோதிடர்களாக மாறிவிடலாம்.

இன்றைய காலத்தில் சோதிடத்தை நாம் பார்க்கின்ற இடம் ஒரு தனி அறையாக இருக்கின்றது. அதாவது ஏதாவது ஒரு வீட்டில் வைத்து பார்த்து வருகிறோம். உண்மையில் இப்படி பார்க்கும்பொழுது நமக்கு அந்தளவுக்கு பலனை சொல்லமுடியாது.

நாம் பார்க்கும் இடம் மிக முக்கியமான ஒன்று. அந்த காலத்தில் சோதிடம் பார்க்க ஏதாவது ஒரு இயற்கையான சூழ்நிலையை தேர்ந்தெடுப்பார்கள். இயற்கை நமக்கு ஏதாவது உணர்த்திக்கொண்டே இருக்கும்.

தனிஅறையில் செல்போனை தவிர வேறு எதுவும் உணர்த்தமுடியாது. இயற்கையான இடத்தில் இருந்து சோதிடம் பார்க்கும்பொழுது நம்மிடம் கேள்வி கேட்கும்பொழுது அந்த இயற்கையே பல விசயங்களை நமக்கு காட்டிக்கொடுக்கும். நாம் அதனை உணர்ந்து பலனை சொல்லலாம்.

நீங்கள் வேண்டுமானால் ஒரு முறை ஏதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து சோதிடப்பலனை சொல்லிப்பாருங்கள். அப்பொழுது நீங்கள் சொல்லும் பலன் சரியாக இருக்கும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      நிறைய நண்பர்கள் சித்தர்களைப் பற்றி எழுதினீர்கள் தற்பொழுது அதனைப்பற்றி எழுதவில்லை என்று கேட்டார்கள்.

சித்தர்களைப்பற்றி எல்லாம் சொல்லலாம் ஆனால் ஒரு சில விசயங்கள் ரகசியமாக இருக்கவேண்டும் அதனை போதிக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே நாம் சொல்லமுடியும். அதனை பொதுவில் எழுதினால் அதனால் நமக்கு பிரச்சினை என்பதால் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

சித்தர்களைப்பற்றி நிறைய பதிவுகளை நண்பர்கள் எழுதுவார்கள். கொஞ்ச காலத்திலேயே அந்த பதிவுகள் அனைத்தும் நின்றுவிடும் காரணம் அவர்களுக்கு தெரியாமலே சித்தர்கள் அதனை நிறுத்திவிடுவார்கள்.

நமக்கு தெரியாமல் புத்தகங்களை படித்துவிட்டு இதனை எழுதினால் நமக்கு பெரிய பெயர் கிடைக்கும் என்று விளையாட்டாக ஆரம்பித்தாலும் அது வினையில் சென்றுமுடியும்.

சித்தர்களை பற்றி அறிவதற்க்கு உங்களிடம் எண்ணம் இருந்தாலே போதும். சித்தர்களைப்பற்றி அறிய உங்களுக்கு சித்தர்களே வழிகாட்டுவார்கள். சித்தர்களைப்பற்றி நாம் எழுதவேண்டியதில்லை.

உங்களிடம் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஜாதககதம்பத்தில் ஐந்து சதவீத கருத்தை மட்டுமே என்னால் சொல்லமுடியும். மீதியை வெளியில் சொல்லுவதற்க்கு என்னால் முடியாது. அது ரகசியமாக தான் இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்றைய காலை பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னிடம் போன் மற்றும் மெயில் செய்து எப்படி சார் பெண்களிடம் இருந்து சக்தியை எடுப்பது என்று கேட்டார்கள்.

நான் கொஞ்சம் சொல்லுவேன் நீங்கள் தான் அதனை பிடித்துக்கொண்டு நீங்கள் வெளியில் தேடி அறிந்துக்கொள்ளவேண்டும். அதனைவிட்டு விட்டு என்னிடமே வந்த நீங்கள் தானே சொன்னீர்கள் அதனால் எனக்கு கற்றுக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

ஒரு கோடு ஒன்றை போடுவேன் அதனை வைத்து நீங்கள் ரோடு போட்டுக்கொள்ளுங்கள்.ஒன்றை தேடிபோகின்றீர்கள் அந்த தேடுதலில் கண்டிப்பாக இருக்கிறது என்று நான் சொல்லிவிட்டால் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தேடிச்செல்வீர்கள். கண்டிப்பாக இது இருக்கிறது அவர் சொல்லிருக்கிறார். நாம் தேடுவோம் கண்டிப்பாக கிடைக்கும் என்று உங்களின் தேடுதல் இருக்கும்.

அவநம்பிக்கையில் தேடிக்கொண்டிருக்கும்பொழுது உங்களின் வேகம் குறையும். அதனால் நான் இது இருக்கிறது என்று சொல்லிவிடுவேன். நீங்கள் அதனை பிடித்துக்கொண்டு தேடி அதனை அடைந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.


மகான்களின் சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டு உங்களின் பிரச்சினையை தீர்க்கிறான் என்றால் அவன் சாதாரணமான ஆளாக இருக்கமுடியாது. கண்டிப்பாக அவன் மகானாக தான் இருப்பான். 

இந்தியாவில் அமர்ந்துக்கொண்டு அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு ஒரு பிரச்சினையை தீர்ப்பது என்பது சாதாரணமான ஒரு வேலை கிடையாது. மிகப்பெரிய அளவில் சக்தி இருக்கவேண்டும். அப்பொழுது தான் அது சாத்தியப்படும்.

இப்படிப்பட்டவர்கள் நீங்கள் வாழ்நாளில் பார்த்தால் அவரோடு நீங்கள் பழக்கம் ஏற்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது. ஏன் என்றால் பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும். நாமும் சக்தியோடு இருக்கலாம்.

ஒரு சில மகான்களை நாம் தரிசிக்கும்பொழுது நமக்கு அளவுக்கு அதிகமான சக்தி கிடைக்கும். அந்த சக்தியால் நமது கர்மவினை தொலைந்து நல்ல வாழ்க்கையை நாம் வாழலாம்.

இப்படிப்பட்ட மகான்களை கண்டிப்பாக நீங்கள் சந்தித்து இருப்பீர்கள் அல்லவா. அவர்களிடம் இருந்து ஏதாவது ஒன்றை நீங்கள் பெற்று இருப்பீர்கள் அதனை நீங்கள் தக்கவைத்துக்கொண்டால் தொடர்ந்து அந்த மகான் உங்களுக்கு நல்லதை செய்துக்கொண்டே இருப்பார். தக்கவைத்துக்கொள்வது என்றால் அவரிடம் நாம் சரணாகதி அடையவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில நேரங்களில் எனது ஆத்மா வெளிக்கிரகங்களுக்கு சென்று வருவதை நான் உணர்ந்து இருக்கிறேன். முழுமையாக உணர்ந்தது கிடையாது அதாவது எந்த இடம் என்பது தெரியவில்லை.

ஒவ்வொருவரின்  ஆத்மாவும் வெளியில் சென்று வருகிறது என்பதை நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியுள்ளேன். கொஞ்சம் நல்ல முறையில் நீங்கள் ஆன்மீகப்பயிற்சி எடுத்தால் அதனை உணரமுடியும்.

பல இடங்கள் நமக்கு அருகிலேயே அற்புதமாக இருக்கின்றது ஆனால் நம்மால் அதனை பார்க்கமுடியாதப்படி கடவுள் செய்திருக்கிறார். மிக அற்புதமான உலகமாகவே இருக்கிறது. மிக அழகாகவும் இருக்கிறது.

நரகமான உலகமும் இருக்கின்றது. மிகவும் மோசமான இடங்களாகவே அது இருக்கிறது என்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஒரு வேலை அது நரகம் என்று சொல்லுகிறார்களே அதுவாக இருக்குமோ என்று கூட நினைத்தேன்.

இதனை நீங்கள் நம்பமாட்டீர்கள் ஆனாலும் நம்புவர்களுக்கு சொல்லுகிறேன். உங்களுக்கு இது தெரியும்பொழுது என்னைப்பற்றி புரிந்துக்கொள்ளமுடியும்.நாம் என் என்னவோ செய்துக்கொண்டு நமது காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறோம். நாம் நன்றாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம் என்றாலும் நமது தேடுதலை அதிகப்படுத்தினால் அனைத்தையும் நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

மனித படைப்பு என்பது மிகவும் ஒரு அற்புதமான படைப்பு. இந்த மனிதப்படைப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்தினால் நீங்கள் இந்த மனிதப்பிறப்பை எடுத்ததின் நோக்கம் நிறைவேறும்.

நம்பினால் நம்புங்கள்...

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Wednesday, August 27, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!

ஐயா வணக்கம்,

   ஒரு சந்தேகம். ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே கடவுள்(பல பெருமாள் படம்,பல  முருகன் படம்...) படத்தினை வைத்து பூஜை அறையில்  வழி படலாமா?. ஆண் ,பெண் கடவுள் படத்தினை ஒன்றாக வைத்து பூஜை அறையில்  வழி படலாமா?
   நன்றி ஐயா.
  அ.செல்வக் குமார்.

இன்றைக்கு நாம் கோவிலுக்கு சென்றால் அந்தந்த கோவிலின் படத்தினை வாங்கி வந்து விடுகிறோம். அதனை கொஞ்ச நாள் நமது பூஜையறையில் வைத்து வணங்குகிறோம். அது பழைய படமாக சென்றவுடன் அதனை தூக்கி போட்டுவிடுகிறோம்.

நீங்கள் உங்களின் விருப்பத்திற்க்கு தகுந்தவாறு வாங்கி பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். ஒன்றும் தவறு கிடையாது. நாம் பார்க்கும் விசயம் நம்மை பாதிக்க செய்யும். மனதின் இயல்பு. நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு பிறகு தெய்வங்களின் போட்டோவை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக ராஜா வேடத்தில் முருகன் இருக்கிறார் என்றால் அவரை பார்த்தவுடன் நீங்கள் ராஜாவாக வாழவேண்டும் என்று நினைப்பீர்கள். அதே நேரத்தில் ஆண்டி கோலத்தில் முருகன் இருந்தால் அவரை பார்த்தவுடன் நீங்கள் ஞானத்தை தேடி ஓடிவிடுவீர்கள். 

பெருமாள் அம்மன் மற்றும் முருகன் போட்டோ வைத்து வணங்கலாம் ஆனால் உங்களின் குலதெய்வத்தின் படத்தை வைத்து வணங்கினால் மிகவும் நல்லது. படம் கூட தேவையில்லை ஒரு விளக்கை ஏற்றி வணங்கினால் கூட போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    மேலே உள்ள ஜாதகத்தை பாருங்கள். இவரின் லக்கினம் ரிஷபம். லக்கினாதிபதி சுக்கிரன் மூன்றாவது வீட்டில் அமர்ந்து இருக்கிறார். இவரின் ராசி சிம்மம். இவருக்கு ராகு தசா ஆரம்பித்தது.

இவருக்கு ராகு தசா ஆரம்பித்த காலத்தில் இருந்து இவருக்கு வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டது. நன்றாக சென்றுக்கொண்டிருந்த தொழில் ராகு தசாவில் பெரிய அளவில் சரிவை சந்தித்து. இவருக்கு ராகு பத்தாவது வீட்டில் இருக்கிறது. ராகு கிரகம் சனிக்கிரகத்தின் வீட்டில் இருக்கிறது.

சனிக்கிரகம் நீசமாகி விரையவீட்டில் இருக்கிறது.எந்த கிரகம் நீசமானாலும் சனிக்கிரகம் மட்டும் நீசமாககூடாது. சனிக்கிரகம் நீசமாகிவிட்டால் பெரிய பிரச்சினை தந்துவிடும். கோச்சாரபடி நீசமானால் கூட அனைவருக்கும் பிரச்சினை ஏற்படும்.

ராகு சனியின் வீட்டில் இருந்ததால் ராகு சனியைப்போல் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. சனி ஒன்பதாம் மற்றும் பத்தாவது வீட்டிற்க்கு சொந்தக்காரனாக இருந்தாலும் அவர் சென்று அமர்ந்த வீடு விரைய வீடாக இருந்ததால் அவரால் முழு பலனையும் தரமுடியவில்லை.

தொழிலில் சரிவை தந்தோடு இல்லாமல் அவரை தொழிலில் இருந்து கொஞ்ச காலத்தில் வெளியே செல்ல வைத்தது.ஏற்கனவே நாம் ராகு தசாவைப்பற்றி பார்த்து இருக்கிறோம். ராகுவின் தசாவும் மிகப்பெரிய அளவில் பிரச்சினையை தரும் என்றாலும் சனியின் நிலை தான் இவரை கீழே தள்ளியது என்று முடிவு எடுத்து சனிக்கிரகத்திற்க்கு தகுந்த பரிகாரம் செய்தேன். ஒரளவு தற்பொழுது முன்னேறி வருகிறார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.


வாக்கு பலிதம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சோதிடர் என்பவர் பல வருடம் தொழில் செய்து வந்தால் அவர் சொல்லும் பலன் அவரின் வாக்கு பலிதத்தால் கண்டிப்பாக நடக்கும். கிரகங்கள் செய்யாவிட்டாலும் இவர்களின் வாக்குபலித்தால் அது நடக்கும். அதனால் சோதிட தொழில் என்பது ஏனோ தானோ என்று செய்யாமல் மிகவும் பக்தியோடு செய்யப்படவேண்டும்.

ஒருவரின் ஜாதகத்தை பார்க்கும்பொழுது அவர் கண்டத்தில் இருந்தால் கூட அதனை நீங்கள் சொல்லும்பொழுது நேரிடையாக கண்டம் என்று சொல்லாமல் வெளியில் தெரியாது போல் சொல்லவேண்டும். ஏன் என்றால் நீங்கள் நேரிடையாக சொன்னால் அவர் இறப்பதற்க்கு கூட வாய்ப்பு இருக்கிறது.

ஒரு பனிரெண்டு வருடத்திற்க்கு மேல் சோதிடம் பார்த்தால் அவரின் வாக்கு மிகப்பெரிய சக்தியாக இருக்கும். அவர் சொன்னதால் அந்த நிகழ்வு நடைபெறும். அப்படி என்ன சோதிடர்களிடம் இருக்கிறது என்று கேட்கிறீர்களாக சனி குரு என்று ஒவ்வொரு கிரகமாக பெயரை சொல்லி வருவதால் அது மந்திரம் போல் மாறிவிடும். கிரகங்கள் அவரின் வாக்குக்காக செய்துக்கொடுக்கும்.

ஒரு சிலர் என்னிடம்  எப்படி சார் வாக்கு பலிதம் ஏற்படுவதற்க்கு வழி சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அதற்கு நான் சொல்லும் வழி நீண்ட காலம் சாேதிடத்தை சொல்லி வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு வாக்கு பலிதம் ஏற்படும் என்பேன்.

ஒரு சிலர் வாக்கு பலிதத்தால் அடுத்தவர்களை கெட்டு போகவைத்த சோதிடர்களும் இருக்கிறார்கள். இதுவும் இறைவனின் திருவிளையாடல் என்று தான் சொல்லவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

விரைய தசா பகுதி 41


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் ஒரு நண்பர் ஜாதகம் பார்த்தார். அவரின் ஜாதகத்தில் விரைய வீட்டில் மாந்தி அமர்ந்து இருந்தது. மாந்தியோடு புதன் சேர்ந்து அமர்ந்து புதன் தசா நடைபெற்றது.

அவர் என்னிடம் எனக்கு வித்தியாசமான கனவுகள் ஏற்படுகிறது. நான் பார்க்ககூடாதை எல்லாம் பார்க்கிறேன் என்றார். நான் நேரில் கூட இரவில் இப்படி பேய் மாதிரி பார்க்கிறேன் என்று சொன்னார்.

நான் பேய் எல்லாம் நம்புவதில்லை என்றாலும் இவர் சொல்லுவது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. நான் அவர் சொல்லுவதை உன்னிப்பாக கவனித்துவிட்டு அவரிடம் சொன்னேன். இனிமேல் இப்படி எல்லாம் உங்களுக்கு நடைபெறாது என்று சொல்லிவிட்டு அம்மன் வணங்குங்கள் என்று சொன்னேன்.

மாந்தி விரைய வீட்டில் அமரும்பொழுது வித்தியாசமான கனவு ஏற்படும். மாந்தி என்பது ஆவி உலகத்தை குறிக்கும் கிரகம் என்பதால் அவர் கண்டது நான் பொய் என்றும் சொல்லமுடியாது. ஆவியுலகத்தில் உள்ள விசயங்கள் அப்படிப்பட்டவை.

நமது அம்மனை வணங்கினாலே போதும். இந்த மாதிரி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். நமது அம்மன் அல்லது கிராமத்து தேவதையாக பார்த்து வணங்கினால் இதற்கு நல்ல தீர்வு ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் பேசும்பொழுது நான் தினமும் கொஞ்சம் குடிக்கிறேன் இதனால் எனக்கு பிரச்சினை ஏதும் வருமா என்று கேட்டார்.

நான் முடிந்தவரை எல்லாம் செய்யுங்கள் என்று தான் சொல்லுவேன். உங்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்காத வரை பிரச்சினை இல்லை. தீங்கு விளைவித்தால் பிரச்சினை ஆகிவிடும். நான் மது அருந்த விரும்புவதில்லை. ஏன் என்றால் அதனை அருந்தினால் எனது நரம்பு மண்டலம் பாதிக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

நரம்பு பாதித்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கும் தெரியும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். அதனை நன்றாக அனுபவிக்கவேண்டும் நன்றாக அனுபவிக்கவேண்டும் என்றால் நமது உடல் நன்றாக இருக்கவேண்டும் இல்லையா அதனால் குடியை குறைத்துக்கொள்வது நல்லது.

குடியை நிறுத்தினால் கூட மிகவும் நல்லது. நான் உங்களிடம் சொல்லும் விசயம் அனைத்தும் உங்களின் உடலை நல்ல முறையில் இருக்கவேண்டும் அதிக நாள் வாழ வைக்கவேண்டும் என்பதற்க்காக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

உடலை மிக தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் அதே நேரத்தில் மிகவும் சொகுசாக வைத்துக்கொள்ளவேண்டும். சொகுசு என்றால் குளிர்சாதன அறையில் இருப்பது அல்ல. உடலை கஷ்டப்படுத்தகூடாது அதற்கு தேவையான நல்ல உணவை கொடுக்கவேண்டும். ஒரு ராஜா இருப்பது போல் தன் உடலை சொகுசாக வைக்கவேண்டும்.

மதுவை குடிக்காமல் இருந்தால் நல்லது. உடலுக்கு தீங்கு என்று சொல்லும் விசயங்களை அனைத்தையும் நீங்கள் வைவிட்டால் உங்களின் வாழ்க்கை மிகவும் ஆனந்தமான வாழ்க்கையாக அமையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    சக்தியை பற்றி நிறைய சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். அப்பொழுது தான் உங்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும். அதன் பிறகு நீங்களே ஆன்மீகத்தை எளிதில் புரிந்துக்கொள்ளமுடியும்.

இல்லறத்தில் இருந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் சாமியாராக இருக்கிறார்கள். இவர்களை நீங்கள் தற்பொழுதும் பார்க்கலாம். இவர்கள் மட்டும் சக்தியோடு எப்படி இருக்கமுடிகிறது என்று நீங்கள் ஒரு நாள் யோசித்து பார்த்து இருக்கிறீர்களாக?

அனைவராலும் சக்தியோடு இருக்கமுடியும் ஆனால் நாம் அதனை நம்புவதில்லை அதற்க்கான வழிமுறைகளை யாரும் பின்பற்றி வருவதில்லை. அந்த காலத்தில் பார்த்தீர்கள் என்றால் இல்லறத்தில் இருப்பவர்கள் தான் மிகப்பெரிய சாமியாராக இருப்பார்கள். இது எப்படி சாத்தியம் என்று பார்த்தால் அதனுள் ஒரு விசயம் புலப்படும்.

நான் ஆண்கள் மட்டும் படிக்கும் பதிவில் ஒரு விசயத்தைப்பற்றி சொல்லிருந்தேன். அதாவது பெண்களை நாம் மதித்தால் மட்டுமே நமக்கு சக்தி கிடைக்கும் என்று சொல்லிருந்தேன். 

நாம் அவர்களை மதிப்பது ஒரு வழியாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து நாம் சக்தியை எடுக்க கற்றுக்கொள்ளவேண்டும் அப்படி எடுக்க கற்றுக்கொண்டால் நாம் எளிதில் மிகப்பெரிய சக்தி படைத்தவர்களாக மாறிவிடமுடியும். நான் நிறைய வீட்டிற்க்கு சோதிடம் பார்க்க செல்லும்பொழுது நன்றாக கவனித்து பார்த்த ஒரு விசயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். 

ஆண்களை பார்க்கும்பொழுது நோஞ்சானாக இருக்கிறார்கள் என்ன காரணம் என்றால் இவர்களின் சக்தியை அனைத்தையும் அவர்களின் மனைவி பிடுங்கிக்கொள்கிறார்கள் இவர்கள் சக்தி இல்லாமல் இருக்கிறார்கள். மனைவியிடம் இருந்து சக்தியை பெறுவதற்க்கு பதில் இவர்கள் தங்களுடைய சக்தியை இழந்து நிற்கிறார்கள்.

ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் சக்தியை பெறுகிறான் என்றால் அந்த ஆணை எவனாலும் வெல்ல முடியாது. மிகப்பெரிய சக்தி பீடமாகவே ஆண் விளங்கிவிடுவான்.

எப்படி பெண்களிடம் இருந்து ஆண் சக்தியை பெறுவது என்று கேட்கிறீர்களாக ஒரு நல்ல சாமியாராக பார்த்து இதனை தெரிந்துக்கொள்ளுங்கள். இதனைப்பற்றி நான் சொல்லகூடாது. ஒவ்வொரு ஆணும் இல்லறத்தில் ஈடுபட்டாலும் அவனால் மிகப்பெரிய சக்தியோடு இருக்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Tuesday, August 26, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    இன்று ஒரு நண்பர் பேசும்பொழுது என்னிடம் எங்களுக்கும் ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னார். அவரிடம் சொன்னதை உங்களிடம் சொல்லுகிறேன்.

உங்கள் அனைவருக்கும் சோதிடம் நன்றாக தெரியும். ஒவ்வொரு கிரகங்களும் உங்களுக்கு பிரச்சினையை தரும் நிலையில் தான் பெரும்பாலும் இருக்கும். கோச்சாரப்பலன்கள் கூட அதிகஅளவில் கெடுதல்களை செய்யுது கொண்டு தான் இருக்கும்.

ஒவ்வொரு கிரகங்களும் சுற்றிக்கொண்டே இருக்கும்பொழுது நமது கர்மவினையை கொடுத்துக்கொண்டு தான் இருக்கும். கர்மவினை குறைப்பதற்க்கு தான் பரிகாரம் எல்லாம் இருக்கிறது. 

ஒரு ஆளுக்கு ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்று விட்டுவிட்டு இருந்தால் கொஞ்ச நாளில் மறுபடியும் பிரச்சினை வந்துக்கொண்டு இருக்கும். ஏன் என்றால் அடுத்த கிரகங்கள் தாக்க ஆரம்பித்துவிடும்.

உங்களுக்கே தெரியும் நாம் ஏழரை சனி மற்றும் ஏதாவது பாதிப்பை சொல்லி நமக்கு பிரச்சினை வரும் என்று சொல்லிக்கொண்டு இருப்பீர்கள் ஆனால் பெரிய அளவில் இருக்கும் பணக்காரர்களை பார்த்தால் அவர்கள் இதனை கண்டு பயம்கொள்ளாமல் இருப்பார்கள். வெளியிலும் காட்டிக்கொள்வதில்லை. அதற்கு காரணம் என்ன என்றால் அவர்களின் பின்பு நிறைய ஆன்மீகவாதிகள் இருக்கின்றார்கள்.

உங்களுக்கு நான் செய்ய தயாராக இருக்கிறேன் நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா என்று தான் எனது கேள்வி இருக்கும். குறைந்தது மூன்று மாதத்திற்க்கு ஒரு முறையாவது பூஜை செய்ய வேண்டும் அப்பொழுது தான் இந்த மாதிரி கிரகங்களின் பிரச்சினையில் இருந்து தப்பி உங்களின் வாழ்க்கை நன்றாக வாழ முடியும்.

என்னிடம் கூட வரவேண்டியதில்லை உங்களின் ஊர்க்கு அருகில் இருப்பவர்களிடம் சொல்லி அதற்கு பரிகாரம் செய்துக்கொள்வது நல்லது. அதனையும் செய்யமுடியவில்லை என்றால் நீங்களே ஆலயவழிபாடு செய்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

தவிர்ப்போம்


வணக்கம் நண்பர்களே!
                    நம்மில் பல பேர் செல்போனில் மந்திரங்களை டீயூனாக வைத்திருக்கிறார்கள். அது தவறான ஒன்று. ஏன் என்றால் மந்திரங்கள் ஒரு வித நல்ல சூழ்நிலையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கண்ட இடத்திலும் அதனை பயன்படுத்தகூடாது.

நாம் எந்த இடத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறோம் என்று தினமும் கணித்துக்கொண்டு இருக்கமுடியாது. இறைவனின் மந்திரங்களை நல்ல சூழ்நிலையில் ஒலிக்கும்பொழுது மட்டுமே நல்ல விசங்களை அது பெற்று தரும். தவறான இடத்தில் அது ஒலிக்கும்பொழுது அது உங்களுக்கு பிரச்சினையை கொடுத்துவிடும்.

நாம் இந்து மதம் என்று சொல்லிக்கொள்ள செல்போன் காலர் டியூன் தேவையில்லை. நமது மந்திரங்களில் மிகப்பெரிய விசயங்கள் அடங்கியிருக்கின்றன. அந்த மந்திரங்கள் ஒலித்தவுடன் நீங்கள் மிகப்பெரிய பிரபஞ்ச சக்தியோடு தொடர்புக்கொள்வது போல் தான் நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள் அதனை கண்ட இடங்களில் ஒலிக்கும்பொழுது உங்களுக்கு பிரச்சினை வரும்.

இனிமேல் அப்படி வைத்துக்கொள்ளவேண்டாம். மந்திரங்களை நீங்கள் பூஜையறையில் இருக்கும்பொழுது மட்டுமே பயன்படுத்திக்கொள்ளுங்கள் அல்லது நல்ல சூழ்நிலை அமையும் தருணத்தில் அதனை பயன்படுத்திக்கொண்டால் பிரபஞ்சசக்தி உங்களை மிகப்பெரிய அளவில் உயர்த்தும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    செவ்வாய் பரிகாரத்தை படித்துவிட்டு நண்பர் சொல்லிருந்தார். இது லஞ்சத்திற்க்கு வழி என்று சொன்னார். நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நாம் அனைத்து சான்றிதழ்கள் வைத்திருந்தாலும் நம்மிடம் ஒரு நூறு ரூபாயாவது கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று கேட்பார்கள். நம்மிடம் பிச்சை எடுப்பது போல் தான் அவர்களின் நிலை இருக்கும். ஒரு சில விசயங்களை நாம் இப்படி தான் செய்ய வேண்டும்.

நமது குறிக்கோள் உலகத்தை திருத்துவது கிடையாது. உலகம் அப்படி தான் இருக்கும் அதனை எல்லாம் நாம் மனதில் போட்டுக்கொண்டு இருந்தால் நமக்கு பிரச்சினை மட்டுமே வாழ்க்கையாக இருக்கும். உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன்.

ஒரு ஆன்மீகவாதி இப்படி வெளியில் அப்பட்டமாக சொல்லமுடியாது ஆனால் நான் சொல்லுவேன். நம்மோடு வேலையே எல்லா வழியையும் சொல்லுவேன். பிழைக்க தெரிந்த பிள்ளை பிழைத்துக்கொண்டு போகட்டும். நான் செய்யமாட்டேன் என்று சொன்னால் உங்களின் பாடு. 

நான் எனது நண்பர்களிடம் நிறைய விசயங்கள் சொல்லுவேன். கடைசியில் நான் தப்பித்துவிட்டேன் முடிந்தால் நீ தப்பித்துக்கொள். இது எப்படி இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

செவ்வாய்க்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    செவ்வாய் கிரகத்திற்க்கு ஒரு பரிகாரம் நான் செய்வேன். அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். உங்களுக்கு பிடித்தால் இதனை செய்யலாம். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பாதுகாப்புதுறையில் இருப்பவர்கள் அனைவரும் செவ்வாய் கிரகத்தின் காரகத்தில் இருப்பவர்கள். இந்த துறையில் இருப்பவர்களுக்கு நாம் உதவி செய்தால் நமக்கு செவ்வாய்கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

சென்னையில் நான் இருக்கும்பொழுது எனது நண்பர் ஒருவரிடம் அவரது பைக்கை எடுத்துக்கொண்டு வா என்று சொல்லிவிட்டு ஏதாவது ஒரு இடத்திற்க்கு செல்வது உண்டு. அப்படி செல்லும்பொழுது பைக்கில் கொஞ்சம் வேகமாக சென்றாலும் உடனே பாேக்குவரத்து பாதுக்காப்பு துறையில் இருக்கும் காவலர்கள் எங்களை மடக்கிவிடுவார்கள்.

நான் அவர்களை பார்த்தவுடன் சந்தோஷப்பட்டுக்கொள்வேன் நமது பாவத்தை குறைக்க ஆண்டவனே அனுப்பிவைத்தவர்கள் போல் தெரிவார்கள். அவர்கள் எப்படியும் பணத்தை தான் வாங்க நினைப்பார்கள். நான் கொடுக்கும்பொழுது எனது கர்மா முழுவதும் இத்துடன் தீரவேண்டும் என்று நினைத்து கொடுத்துவிடுவேன்.

நீங்கள் இதனை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும் அதாவது செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு பெருமளவு குறையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Monday, August 25, 2014

அம்மன் பூஜை

வணக்கம் நண்பர்களே!
                    இந்த மாதம் அம்மனின் பூஜை அடுத்த வாரத்தில் நடைபெறும். அம்மனிடம் வேண்டுதல் வைத்து அந்த காரியம் வெற்றி பெற்றவர்கள் இந்த பூஜையில் கலந்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு தமிழ்மாத கணக்கில் இந்த பூஜை நடத்திக்கொண்டு வருகிறேன். ஒவ்வொரு மாதமும் இதற்க்காக செலவு அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது அந்த பங்களிப்பு எல்லாம் நீங்கள் செய்த உதவியால் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் இதற்க்கான பங்களிப்பை தொகை அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது. அனைத்தும் அம்மனின் அருளை தவிர வேறு ஒன்றும் கிடையாது.

பல ஏழை மக்கள் தங்களின் வேண்டுதலை வைத்துவிட்டு அதனை அம்மன் நடத்திக்கொடுத்து இருக்கிறது. அவர்கள் அவர்களால் முடிந்த பணத்தை அனுப்பி வைக்கிறார்கள். மிகவும் கஷ்டப்படுபவர்கள் பணம் அனுப்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அம்மன் உங்களுக்கான உதவியை நிறுத்தாமல் செய்துக்கொடுக்கும்.

இந்த மாதமும் அம்மனின் பூஜையில் பங்களிப்பை செலுத்த நினைப்பவர்கள் பணத்தை அனுப்பி வையுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

பிரச்சினை சொல்லிவிடுவது நல்லது


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னிடம் பேசுகிறார்கள். மெயில் செய்து பாராட்டுகிறார்கள் ஆனால் அவர்களின் பிரச்சினை என்ன என்று மட்டும் வருடக்கணக்கில் சொல்லுவது கிடையாது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

பிரச்சினை பெரிய அளவில் வந்தவுடன் இப்படி மாட்டிக்கொண்டேன் என்று சொல்லுகிறார்கள். நான் உதவுமாட்டேன் என்று நீங்கள் நினைப்பது தவறு. என்னால் முடிந்தளவு உதவமுடியும். என்னை மீறி செல்லும்பொழுது மட்டுமே நானே சொல்லிவிடுவேன் என்னால் முடியாது வேறு இடத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்பேன்.

என்னிடம் தொழிலுக்கு என்று கேட்டால் மட்டும் அவ்வளவு எளிதில் பேசமாட்டேன். அதற்கு காரணம் அது என்னால் மட்டும் நடப்பதில்லை மற்றப்படி உங்களின் தனிப்பட்ட பிரச்சினைக்கு உடனே தீர்வு என்னால் சொல்லமுடியும்.

உங்களுக்கு பிரச்சினை வந்தவுடன் அதனை எதிர்க்கொள்வது முடியாத ஒன்று ஏன் என்றால் வந்தபிறகு அதன் முழுவீரியத்தையும் காட்டிவிட்டு தான் செல்லும். அடி பலமாக விழும். நாம் குறுக்கே சென்றால் நமக்கும் சேர்த்து விழும். 

ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொருவருக்கும் அதிக பிரச்சினையை கொடுக்க தான் உள்ளதே தவிர அதிக நன்மையை கொடுக்காது. கர்மவினையை அறுப்பதற்க்கு உங்களை பிரச்சி்னையில் மாட்டிவிட்டு கொல்லும். 

மனிதர்களை வெளியில் பார்ப்பதற்க்கு பெரிய அளவில் சந்தோஷத்தோடு இருப்பதாக உங்களுக்கு தெரியும் ஆனால் உள்ளே பார்த்தால் தான் என்ன வெட்டவெளிச்சம் என்று புரியும். அதனால் ஒவ்வொருவரின் பிரச்சினையையும் ஒழிவு மறைவின்றி சொல்லிவிடுவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் நமது நண்பர்கள் பேசும்பொழுது சொல்லுவார்கள். எனக்கு கோபம் அதிகமாக வருகிறது அதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்பார்கள்.

கோபம் வருவது மனித இயல்பு. கோபம் எல்லை தாண்டி போககூடாது. எல்லை தாண்டி போகும்பொழுது தான் பிரச்சினை வரும். அதற்கு மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டால் நல்லது.

ஆன்மீகத்தில் இருப்பவர்களே கோபம் வரும். அதனை காட்டிக்கொள்ளமாட்டார்கள். கோபம் என்பது ஒரு வித சக்தி. அந்த சக்தியை ஆக்க வழியில் பயன்படுத்தவேண்டும். அந்த சக்தியை பயன்படுத்திக்கொண்டால் உங்களின் வாழ்க்கையை நல்ல முறையில் உயர்த்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆன்மீகவாதியும் உங்களிடம் சொல்லுவார்கள். கோபம் கூடாது. காமம் கூடாது என்பார்கள். நான் உங்களிடம் சொல்லுவேன். இந்த இரண்டும் இல்லை என்றால் நீ ஆன்மீகத்தில் இருப்பதற்க்கு தகுதி இல்லாதவன்.

இரண்டில் ஒரு சக்தி உங்களிடம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அதனை வைத்து எளிதில் கடந்துவிடமுடியும். நான் எத்தனையோ பேருக்கு அம்மனை வைத்து செய்துக்கொடுக்கிறேன். அவர்களிடம் இந்த இரண்டில் ஒன்று இருக்கும். அப்படி இல்லை என்றால் நான் செய்யும் செயல் உடனே நடக்காது. இந்த இரண்டு சக்தியில் ஒன்றை நீங்கள் எப்பொழுதும் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Saturday, August 23, 2014

சக்தி வெளிப்படும் தன்மை


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று எதார்த்தமாக நெட்டில் தேடியபொழுது உப்பிலியப்பன் கண்ணில்பட்டார். உங்களிடம் அதனை காட்டி யார் என்று கேட்டேன். ஒரு நண்பர் என்னிடம் முகநூல் வழியாக சரியாக சொன்னார். பல பேர் பின்னாேட்டம் வழியாக சொன்னீர்கள் அனைவருக்கும் நன்றி.

தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்களை பார்க்கவேண்டும் என்று சொன்னேன். ஒரு சில கோவிலுக்கு நான் கூட இதுவரை சென்ற்தில்லை. இனி மேல் சென்று அங்குள்ள கோவில்களை பற்றி உங்களுக்கு பதிவில் தருகிறேன்.

பெருமாள் ஒருவராக இருந்தாலும் ஏன் பல பேர்களில் நாம் அழைக்கிறோம் என்றால் ஒவ்வொரு பெயருக்கு தகுந்தார் போல் பலனை கொடுப்பார்கள். சிவனாக இருந்தாலும் சரி அம்மனாக இருந்தாலும் சரி பெயருக்கு தகுந்தார்போல் பலன் கிடைக்கும். அந்தந்த கோவில்களில் அந்தந்த சக்தி வெளிப்படும்.

பிரணாபிரதிஷ்டை செய்யும் நபரின் தன்மைக்கு ஏற்ப கோவிலின் சக்தி வெளிப்படும். பிரதிஷ்டை செய்யும் சித்தர் மற்றும் புரோகிதர்களின் தன்மைக்கு தகுந்தவாறு சக்தி வெளிப்படும்.

சநதோஷமாக வெளிப்படும் தன்மையில் பிரதிஷ்டை செய்தால் அந்த கோவிலுக்கு செல்லும்பொழுது சந்தோஷம் வெளிப்படும். பணம் எண்ணத்தில் பிரதிஷ்டை செய்தால் அந்த கோவிலுக்கு சென்றால் நமக்கு பணம் கிடைக்கும். பிரதிஷ்டை செய்யும் ஆட்களை பொறுத்து இது மாறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Friday, August 22, 2014

மனதில் விளையாடும் கிரகங்கள்


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு சில நேரங்களில் எனக்கு படம் பார்க்க மிக விருப்பமாக இருக்கும். இன்றைக்கு எப்படியாவது ஒரு படம் பார்க்கவேண்டும் என்று தோன்றும். ஒரு சில நேரங்களில் டிவியில் படம் போட்டால் கூட அதனை பார்க்காமல் தவிர்க்கவேண்டும் என்று மனதில் தோன்றும்.

நான் இது எதனால் ஏற்படுகிறது என்று சிந்தித்து பார்ப்பேன். சுக்கிர கிரகத்தின் வேலை என்று பிறகு தான் கண்டுபிடித்தேன். சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கும்பொழுது படம் பார்க்க தூண்டுகிறார். சுக்கிரனின் பலன் குறையும்பொழுது அதன் மீது ஈர்ப்பு குறைகிறது.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னாடி இப்படி ஒரு கிரகம் வேலையை காட்டுகிறது. அப்படி வேலை காட்டும்பொழுது அது தவறாக இருந்தால் அதனை பொறுமையாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும் ஒரு சில மணி நேரத்தில் அதன் வேகம் குறைந்துவிடும்.

நமது மனதில் சின்ன தாக்கத்தை ஏற்படுத்தியவுடன் நாம் விழுந்துவிடகூடாது அந்த நேரத்தில் உஷாராக இருந்து விழி்ப்புணர்வுடன் இது ஏன் இப்படி என் மனது நினைக்கிறது என்று நினைத்தால் கிரகங்களின் பாதிப்பில் இருந்து பாதி தப்பிவிடலாம்.

மேலாேட்டமாக பார்த்தால் இதன் அர்த்தம் உங்களுக்கு புரியாது. கொஞ்சம் நன்றாக சிந்தித்து பார்த்தால் அது உங்களை மிகப்பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    சுக்கிரனை பற்றி நிறைய எழுதுகிறீர்கள். பிராமணர்களைப்பற்றி அதிகம் எழுதுவதில்லை அது ஏன் என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார்.

குரு கிரகத்தைப்பற்றி நிறைய குரு தசாவில் எழுதியுள்ளேன். அதனை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். குரு கிரகத்தை நாம் பின்பற்றி வரவேண்டும் என்றால் நீங்கள் மிக தூய்மையாக இருக்கவேண்டும். இன்றைய காலத்தில் பிராமணர்கள் கூட அப்படி தூய்மையாக இருப்பதில்லை. 

பிராமணர்கள் சுக்கிரனின் கோவிலான காளிக்கோவில் வரை வந்து பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை நாம் குறைச்சொல்லகூடாது. மக்கள் எங்கு செல்லுகிறார்களோ அங்கு அவர்கள் பணிபுரிகிறார்கள். 

பிராமணர்கள் கூட சுக்கிரனை வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களால் ஆச்சாரத்தை பின்பற்ற முடியவில்லை அந்த காரணத்தால் இப்படி மாறிவிட்டார்கள். 

நீங்கள் குருவாக சுக்கிரனை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் இன்றைய காலம் அப்படிப்பட்டது அந்த காரணத்தால் சுக்கிரனைப்பற்றி அதிகமான பதிவுகள் வரும். சுக்கிரனை குருவாக ஏற்றுக்கொண்டு பின்பற்றி வரும்பொழுது உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும். பிராமணர் அல்லாதவர்களின் குரு சுக்கிரன் தான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீகமும் தஞ்சாவூர் மாவட்டமும்


வணக்கம் நண்பர்களே!
                    ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்டால் நீங்கள் செல்ல வேண்டிய முதல் ஊர் தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சாவூர் சென்று அங்கிருந்து கும்பகோணம் சென்று தங்கிக்கொள்ளுங்கள். அதன் பின் ஒவ்வொரு ஊருக்காக சென்று இருக்கின்ற கோவில்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு வாருங்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் பார்த்தால் தான் உங்களுக்குள் ஒரு திருப்தி கிடைக்கும். அனைத்து கோவில்களையும் தரிசனம் செய்யும்பொழுது உங்களுக்கு ஒரு வித பரவசம் கிடைக்கும். 

கோவில்களை பார்க்கும்பொழுது அது எப்பொழுது கட்டப்பட்டது. அந்த கோவிலின் சிறப்பு பற்றியும் நன்றாக அறிந்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவும். அதே நேரத்தில் பல தெய்வங்களின் பெயரை மட்டும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அந்த தெய்வங்களின் சிலையை பார்த்து இருக்க மாட்டீர்கள். அனைத்து தெய்வங்களின் சிலையை பார்க்கவேண்டும் என்றாலும் அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்.

ஒரு வாரக்காலம் தங்கி ஒவ்வொரு கோவிலாக பார்த்துவிட்டு வாருங்கள். ஒரு வாரக்காலம் கூட பற்றாது என்று தான் தோன்றுகிறது. ஏகாப்பட்ட கோவில்கள் இருக்கின்றன. நீங்கள் கண்டிப்பாக போகவேண்டிய இடம் தஞ்சாவூர் மாவட்டம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

குழந்தையின்மை


வணக்கம் நண்பர்களே!
                    குழந்தையின்மை பற்றி இரண்டாயிரம் பதிவில் ஒரு வாய்ப்பை தந்தேன். அதனை பார்த்துவிட்டு மூன்று நண்பர்கள் மட்டும் தொடர்புக்கொண்டனர். இதற்கு மேல் மிகவும் ஏழை மக்கள் தொடர்புக்கொண்டார்.

ஏழையாக இருந்தால் கண்டிப்பாக அம்மனின் உதவி இலவசமாக உங்களுக்கு கிடைக்கும். உங்களிடம் ஒரு பைசா கூட வாங்கமாட்டேன். பணம் இருப்பவர்கள் கண்டிப்பாக கொடுத்தால் மட்டுமே சாத்தியம். 

என்னிடம் நிறைய மக்கள் சோதிடம் பார்க்கும்பொழுது எப்படியாவது அம்மனை வைத்து எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்திக்கொடுங்கள் என்று கேட்டார்கள். அவர்கள் எல்லாம் இந்த நல்ல நேரத்தில் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. ஒரு சிலருக்கு நான் போன் செய்து கூட செய்தேன். அவர்கள் என்னை தவிர்த்தார்கள். பணம் கேட்டுருக்கிறேன் அல்லவா. 

ஒன்றும் தெரியாத சோதிடர்களிடம் சென்றால் கூட உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். அப்படிப்பட்ட கிரக நிலையை வைத்துக்கொண்டு இலவசமாக எப்படி என்னால் செய்துக் கொடுக்கமுடியும்.

எங்கு வேண்டுமானாலும் சென்று எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழித்துவிட்டு வாருங்கள். என்னிடம் வந்தால் பணத்தோடு வந்தால் மட்டுமே காரியம் நடைபெறும். ஏழைகளைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் பேசும்பாெழுதே நான் கண்டுபிடித்துவிடுவேன். அவர்களுக்கு நமது அம்மன் கண்டிப்பாக நல்ல வாய்ப்பை கொடுக்கும். நம்பிக்கையோடு இருங்கள்.

என்னடா இவர் பணம் என்பதை முன் நிறுத்துகிறாரே என்று நினைக்கவேண்டாம். அனைத்தும் நல்ல விசயங்களுக்கு தான் பயன்படுத்த போகிறேன். இருப்பவர்களிடம் வாங்கிக்கொள்கிறேன். இல்லாதவர்களுக்கு இலவசமாக தருகிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

செல்வவளம் உயருவதற்க்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர்கள் அதிகமாக எதிர்பார்ப்பது நமக்கு எப்படியாவது அதிக பணம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்க்கான வழியை நமது ஜாதககதம்பத்தில் சொல்லிக்கொண்டு வருகிறேன்.அதனை எல்லாம் நீங்கள் கடைபிடித்து செல்வந்தராக மாறிவிடுங்கள்.

நம்மிடம் இருக்கும் கர்மாவை குறைக்கவேண்டும். அதனை எப்படி குறைப்பது அதற்க்கான ஒரு வழியை நான் சொல்லுகிறேன். ஒரு சில காலத்தில் அன்னதானம் மிகப்பெரிய தானமாக இருந்தது. அந்த காலம் என்பது மிகப்பெரிய பஞ்சத்தால் மக்களுக்கு உணவு கிடைக்காமல் இருந்திருக்கலாம். இன்றைய காலத்தில் ஒரளவு பஞ்சம் குறைந்துவிட்டது.

பணத்தட்டுபாடு என்றும் நிலவிக்கொண்டே இருக்கிறது. பணத்தை வைத்து ஒரு தானத்தை செய்தால் போதும். நமது கர்மவினை குறையும். பணத்தை வைத்து எப்படி தானம் செய்வது? 

நம்மிடம் இருக்கும் வறுமையான நண்பர்களுக்கு உங்களால் முடிந்த பணஉதவியை செய்யுங்கள். நாம் எதனை வாங்கிக்கொடுத்தாலும் ஒரு சிலர் திருப்தி அடையமாட்டார்கள். அவர்களுக்கு நாம் செய்யும் இந்த சின்ன உதவி அவர்களின் ஆத்மாவில் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும்.

ஒருவர் எதனையோ வாங்க நினைக்கிறார்கள்.கையில் பணம் இல்லை. நாம் பணத்தை கொடுக்கும்பொழுது அவர்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிக்கொள்வார்கள். பணம் கொடுத்து உதவும்பொழுது நமக்கு பணம் எப்படியும் வந்துக்கொண்டே இருக்கும். எதாவது ஒரு வழியில் பணம் வந்துக்கொண்டே இருக்கும். தாராளமாக இதனை நீங்கள் சோதனை செய்து பாருங்கள் தெரியும்.

மனிதனிடம் ஒரு கெட்ட குணம் இருக்கும் ஒரு தடவை கொடுத்தால் அடுத்த தடவையும் வந்து நிற்பான். அதனை மட்டும் தவிர்த்துவிட்டால் போதும்.

மேலே படத்தில் இருப்பவர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

நீச்சல்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நாள் கொஞ்சம் பதிவை தள்ளிபோட்டு வெளியிட்டாலும் ஒரே போன்கால்கள் தான் சார் நீங்க இப்பொழுது எல்லாம் பதிவை தருவதில்லை. மணி மைண்ட்டோடு இருக்கிறீர்களா என்று கேட்க ஆரம்பித்துவிடுகின்றனர் நமது நண்பர்கள். கொஞ்சம் சொந்த வேலை இருந்தது. அந்த காரணத்தால் பதிவை தருவதற்க்கு நேரம் ஆகிவிட்டது. எப்படியும் ஒரு பதிவாது வருகிறதே என்று பாருங்கள். சரி சொல்ல வந்த விசயத்தை சொல்லிவிடுகிறேன்.

உடலுக்கு தேவையான உடற்பயிற்சி எல்லாம் நிறைய சொல்லியுள்ளேன். அதில் ஒன்றைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம். நேற்று காலையில் எனது நண்பர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்டில் இருப்பதாக எனக்கு தகவல் சொன்னார்கள். அவர்கள் அனைவரும் வெளியூரில் இருந்து வந்திருப்பதால் அவர்களை சந்தித்துவிட்டு வரலாம் என்று அங்கு சென்றேன்.

அவர்களை சந்தித்து பேசிவிட்டு இருக்கும்பொழுது நண்பர்கள் சொன்னார்கள் வாருங்கள் நீச்சல்குளத்தில் குளித்துவிட்டு வரலாம் என்று கூப்பிட்டார்கள்.நமக்கு நீச்சல் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. சரி என்று கிளம்பிவிட்டேன். 

நாம் தரையில் செய்யும் உடற்பயிற்சியை விட நீரில் செய்யும் உடற்பயிற்சியில் உடல் நன்றாக வளைந்துக்கொடுக்கும். நாம விவசாயி என்பதால் அனைத்து நீச்சல்பயிற்சியும் நன்றாக தெரியும். ஒரு கை இன்றைக்கு பார்த்தவிடலாம் என்று களத்தில் குதித்துவிட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அற்புதமான சந்தோஷம். 

ஆபத்தான ஆறுகளில் கூட நான் நீந்திச்செல்வேன்.  இந்த நீச்சல் குளம் மிகவும் சிறியது இருந்தாலும் பரவாயில்லை சென்னையில் இதுவே மிகப்பெரிய போல் தான் எனக்கு தோன்றுகிறது. நன்றாக நீச்சல்குளத்தில் குளித்தேன்.

இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் நீங்களும் நீச்சல் பழகுங்கள். நீச்சல் பயிற்சி செய்தால் உடல் நன்றாக இருக்கும். உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

இனி அனைவரையும் நீச்சல் குளத்தில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நேற்று நான் நீச்சல் குளத்தில் குளிக்கும்பொழுது பல பெண்கள் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்னை சிங்காரசென்னையாக மாறிவிட்டது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.