Followers

Wednesday, January 14, 2015

அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                             என்ன தான் சோதிடத்தில் பெரிய ஆள் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு சோதிடரும் இருந்தாலும் உனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒரு சில ஜாதகங்கள் வந்து நம்மை திக்குமுக்காட வைத்துவிடும்.

பத்து நாட்களுக்கு ஒரு ஜாதகத்தையாவது இப்படி கடவுள் அனுப்பி நமது மண்டையில் குட்டு வைத்துவிடுவார். இதனை நான் வெளிப்படையாகவே ஒற்றுக்கொள்வேன்.

ஒவ்வொரு ஜாதகத்திற்க்கும் இப்படி பலனை சொல்லும்பொழுது ஒரு எச்சரிக்கையுடன் இருக்கும்படி செய்வதற்க்கு கடவுளே இப்படி அனுப்புகிறார் என்று நான் நினைத்துக்கொள்வேன். நாம் சொல்லுகிற பலனுக்கும் அவர்களுக்கு குறைந்தது 80 சதவீதமாவது உண்மையில் நடக்கவேண்டும்.

எச்சரிக்கை உணர்வு இருப்பதால் நான் சொல்லும் பலன் மிகச்சரியாகவே அமைகிறது. தலைகணம் கொஞ்சம் எகிறும்பொழுது நமக்கு குட்டு கிடைக்கும். 

கிராமங்களில் சோதிடப்பலன் சொல்லும்பொழுது இளைஞர்கள் பயங்கரமாக கேலி செய்வார்கள். அதனை எல்லாம் தாண்டி நாம் சோதிப்பலனை சொல்லவேண்டும். பலவற்றை சமாளித்தால் தான் நாம் நல்ல சோதிடர் என்று பெயர் வாங்கமுடியும். இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு நடைபெற்று இருக்கிறதா?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: