Followers

Thursday, January 8, 2015

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொரு நாளும் எனக்கு பணம் ஏதாவது ஒருவழியில் வந்துக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் ஜாதககதம்பம் என்று சொல்லலாம். 

மாதம் மாதம் அம்மன் பூஜையை வெளியில் தெரிந்து நடத்தினாலும் ஒவ்வொரு நாளும் நான் தங்கியிருக்கும் அறையில் பூஜை செய்துக்கொண்டு இருப்பேன். நான் எதனையும் மறைப்பது கிடையாது. மாதம் மாதம் அம்மன் பூஜை செய்வதற்க்கு செய்யும் செலவை விட வீட்டில் செய்யும் பூஜைக்கு அதிக செலவு எனக்கு ஏற்படும்.

இதனை எல்லாம் மாதத்தில் வரும் சோதிட வழியாக வரும் வருவாயை வைத்து தான் நடைபெறும். எவ்வளவு பணம் வந்தாலும் அது எனக்கு தங்காது. எதாவது பூஜை செய்து பார்ப்பது எனது வேலையாக வைத்திருப்பேன்.

எனது சுயதேவைக்கு தொழில் அதிபர்களுக்கு செய்யும் வேலையில் இருந்து எடுத்துக்கொள்வேன். அப்படி இருந்தும் பல நேரங்களில் கடன் வாங்கியது உண்டு. கடன் எப்பொழுதும் எனக்கு இருக்கும். 

தொழில் அதிபர்களின் பணம் போதுமானதாக இருந்தாலும் அதனை அவர்களுக்கு பூஜை செய்வதற்க்கே அதிகம் செலவு ஆகும். என்னுடைய சுயபரிசோதனை செய்துக்கொள்வதற்க்கும் நிறைய பூஜைகள் செய்ய வேண்டியுள்ளது. ஏன் இப்படி சுயபூஜை செய்கிறேன் என்றால் ஒவ்வொரு நாளும் ஒரு தேடுதல் இருந்துக்கொண்டே இருக்கும்.இதற்கு எல்லாம் அதிக செலவு தான் ஆகின்றது.

அற்புதமான பல விசயங்கள் சுயதேடுதலில் கிடைக்கிறது. அதற்கு எதனை வேண்டுமானாலும் கொடுக்கலாம். அனைத்திற்க்கும் அம்மன் தான் காரணமாக இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: