Followers

Wednesday, January 14, 2015

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                      நான் சும்மா இருந்தாலும் அம்மன் சும்மா இருக்காது. எங்கிருந்தாவது எனக்கு ஆட்களை அனுப்பிக்கொண்டே இருக்கும். அம்மனை நான் துதிக்கொண்டே இருப்பதால் அப்படி நடைபெறுகிறது. எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் அம்மனை பூஜிக்காமல் இருப்பதில்லை. 

ஒரு சிலர் என்னிடம் வந்து இதனை நீ செய்துக்கொடுத்தால் உனக்கு இதனை நான் செய்து தருவேன் என்பார்கள். இது எல்லாம் நடந்தால் தருகிறேன் என்பது போலதான் இருக்கும். நான் அவர்களிடம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்துவிடுவேன்.

ஒருவர் எனக்கு நன்மை செய்யார் என்று எதிர்பார்ப்போம் ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஒருவர் வந்து எங்களுக்கு உதவி செய்வார். இவர் தான் எனக்கு உதவி செய்யார் என்று நான் ஒருபோதும் நினைப்பதில்லை. ஒரு மனிதனை நம்பவதைவிட நாம் வைத்திருக்கும் சக்தியை நம்பவேண்டும். அது எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்ற நினைப்பு உனக்கு எந்த நாளும் இருக்கவேண்டும் என்று குரு சொல்லுவார்.

ஒரு சக்தியை நீங்கள் நம்பவதாக இருந்தால் தயவு செய்து மனிதனை நம்பவேண்டாம் சக்தியை மட்டும் நம்புங்கள். அது எந்த ரூபத்திலாவது வந்து உங்களை காப்பாற்றிவிடும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Indha visayam namakku purindhuvittal veru edhuvum namkku dhevai illai.