Followers

Monday, January 19, 2015

ஆன்மீகவிழாவிற்க்கு ஆன்மீகவாதிகள்



வணக்கம் நண்பர்களே!
                       சென்னையில் இருந்து இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன். சென்னையில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளவும்.

ஒவ்வொரு இடத்திலும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும்பொழுது அந்த இடத்தில் ஒரு ஆன்மீக பெரியவர் அல்லது நல்ல ஞானம் அடைந்தவர்களை அழைத்து ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த காலத்தில் ஒரு குத்துவிளக்கு பூஜை செய்தால் கூட அதற்கு ஒரு சாமியார் அழைத்து வரப்படுகிறார்.

ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஒரு ஆன்மீகத்தில் உள்ளவர்கள் இருந்தால் அந்த நிகழ்ச்சி மிகவும் சக்தி வாய்ந்தாக இருக்கும் என்று எண்ணி இப்படி செய்வது உண்டு.

ஒரு சில இடங்களில் ஒரு தேவதை வரவேண்டும் என்றால் இப்படிப்பட்ட ஆன்மீகத்தில் உள்ளவர்களால் தான் முடியும். அதே நேரத்தில் எந்த காரியத்திற்க்காக அந்த பூஜை செய்யப்படுகிறதோ அந்த காரியம் வெற்றி அடையவேண்டும் என்பதற்க்காகவும் இப்படிப்பட்ட ஆன்மீக பெரியோர்களின் ஆசி வேண்டும். அதனால் ஆன்மீகத்தில் உள்ளவர்களை அழைத்து பூஜை செய்வார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: