Followers

Thursday, January 22, 2015

செல்வவளம்


வணக்கம் நண்பர்களே!
                      என்னை சந்திக்கும் நண்பர்கள் செல்வ வளத்திற்க்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்பார்கள். நான் நிறைய பதிவுகள் இதனைப்பற்றி எழுதியிருந்தாலும் மேலும் மேலும் இதனைப்பற்றி கேள்விகள் வரும்.

ஜாதககதம்பத்தில் நிறைய கருத்துகளை சொல்லிருக்கிறேன். அதனை பின்பற்றி வந்தாலே போதும் ஆனால் யாரும் செய்யமாட்டார்கள் என்பது மட்டும் தெரியும். அனைத்திற்க்கும் காரணம் சோம்பேறி தனம் மட்டுமே தவிர வேறு ஒன்றும் இருக்காது.

இன்றைய தினம் என்ன பதிவு வரும் அதனை படித்தால் போதும் நாளை வேறு ஒரு பதிவு வரும் அதனை படிக்கலாம் என்று தான் புத்தி போகுதே தவிர எதையாவது ஒன்றை எடுத்து செய்வோம் என்று யாரும் செயல்படுவதில்லை.

செல்வ வளத்திற்க்கு ஒன்றைப்பற்றி பார்க்கலாம். செல்வவளம் நிறைய வேண்டும் என்ற நினைப்பு முதலில் இருக்கவேண்டும். இது போதும் என்ற நினைப்பு மட்டும் வந்துவிடகூடாது. எப்பொழுது எனக்கு இந்த பணம் போதும் அதாவது நான் முன்னேறிவிட்டேன் என்று நினைக்கிறீர்களோ அப்பொழுது அதுவாகவே பணம் வருவது நின்றுவிடும்.

பணப்பற்றாக்குறை இருப்பதாக நீங்கள் நினைக்கும்பொழுது சோதிடத்தில் நமக்கு பணம் தரும் வீட்டு அதிபதி கொடுத்துக்கொண்டே இருப்பார். பணம் போதும் என்றால் அந்த அதிபதி நிறுத்திக்கொண்டு விடும். இது ஒரு சூட்சமும்.

செல்வவளத்திற்க்கு நிறைய பரிகாரம் இருக்கிறது. அதனை என்னை சந்திக்கும்பொழுது கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: