Followers

Wednesday, January 7, 2015

குழந்தை பாக்கியம்


வணக்கம் நண்பர்களே!
                      மனிதனுக்கு ஏற்படுகின்ற பிரச்சினையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது திருமணத்திற்க்கு பிறகு குழந்தையில்லாமல் இருப்பது. தினமும் எனக்கு ஒரு மெயிலாவது இதனைப்பற்றி வந்துவிடும். குழந்தையில்லை எனது ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லுவார்கள்.

முன் ஜென்மத்தில் வரும் பிரச்சினை இது. குழந்தை பாக்கியம் என்பது வாங்கி வந்த வரம் தானே தவிர வேறு ஒன்றும் சொல்லுவதற்க்கு கிடையாது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களை பார்த்து நான் வருத்தப்பட்டது உண்டு. ஏன் என்றால் இந்த விசயம் அவர்களின் கையில் கிடையாது. எல்லாேரும் இல்லறத்தில் ஈடுபடுவது போல் தான் ஒவ்வொருவரும் ஈடுபடுகிறார்கள். ஒருத்தருக்கு குழந்தை இருக்கின்றது அடுத்தவர்களுக்கு குழந்தை இல்லை என்றால் இங்கு தான் கடவுளைப்பற்றி நாம் நினைக்க தோன்றுகிறது.

குழந்தை இல்லாதவர்கள் ஒவ்வொருவரும் அவர் அவர்களின் குலதெய்வத்தை நன்றாக பிராத்தனை செய்துவிட்டு புண்ணியஸ்தலங்கள் சென்று புனித நீராடிவிட்டு ஒவ்வொரு கோவிலாக சென்று வருவது நல்லது.

குழந்தை என்பது ஒரு மிகப்பெரிய வரம் இதனை கடவுள் மனது வைத்து தான் கொடுக்கவேண்டும். கடவுளே மறுக்கும்பொழுது நாம் அவரை சரணாகதி அடைந்து தான் பெறமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு 

No comments: