Followers

Tuesday, January 6, 2015

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி பார்த்து வந்தோம். கொஞ்ச நாளாக அதனை எழுதாமல் இருந்தேன். இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஒரு வீட்டிற்க்கு மேற்கிலும் தெற்கிலும் இடவசதியை அதிகப்படுத்தாதீர்கள். அதாவது இடம் விட்டுவிடகூடாது. இதனை அனைத்து வாஸ்து பார்ப்பவர்கள் சொல்லுவார்கள். ஒரு வீட்டை பார்க்கும்பொழுது தெற்கிலும் மேற்கிலும் இடம் விட்டு கட்டிருந்தார்கள் என்றால் அந்த வீட்டில் இருப்பவர்கள் பிரச்சினையில் தான் இருப்பார்கள்.

உங்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்று ஜாதகத்தை பார்த்துக்கொண்டிருப்பீர்கள் தெற்கில் அல்லது மேற்கில் இடம் விட்டு வீடு கட்டி அதில் குடியிருந்தால் உங்களுக்கு வரவேண்டிய நல்ல நேரம் கண்டிப்பாக வராது.

உங்களுக்கு ஏதாவது உடல்நிலையில் பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கிறது. பெரிய மருத்தவர்களை பார்த்தும் நோய் போகவில்லை என்றால் கண்டிப்பாக உங்களின் வீட்டை தான் பார்க்கவேண்டும்.மேற்கிலும் தெற்கிலும் பிரச்சினை இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: