Followers

Wednesday, January 14, 2015

நீச குரு


வணக்கம் நண்பர்களே!
                      நீசத்தைப்பற்றி நேற்றைய பதிவில் சொல்லிருந்தேன். ஒரு கிரகம் நீசம் என்று மட்டும் பார்க்ககூடாது அது எந்த நட்சத்திரத்தில் செல்லுகிறது என்று பார்த்து பலனை சொல்லவேண்டும்.

ஒரு முறை ஒருவர் சோதிடம் பார்க்க வந்திருந்தார். அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கேட்டு வந்திருந்தார். அவரின் ஜாதகத்தை பார்த்தேன். ஐந்தாவது வீட்டு அதிபதி பிரச்சினையில் இருந்தது.குரு கிரகம் மகரத்தில் இருந்தது. குரு கிரகம் நீசம் அடைந்துள்ளது என்று நானும் இவருக்கு குழந்தை இருக்காது என்று முடிவு நினைத்துவிட்டேன். நானும் குழந்தை பாக்கியம் இருக்காது கடவுளை நன்றாக வழிப்படுங்கள் கடவுளாக பார்த்து செய்தால் உண்டு என்றேன்.

அவர் என்னை சந்தித்த பிறகு ஒரு சில மாதங்களில் என்னை சந்தித்து சொன்னார். அவரின் மனைவி கர்ப்பமாக உள்ளார். கடவுளை வழிப்பட்டதால் உண்டு என்றார்.

எனக்கு அப்பொழுது தான் விபரம் தெரிந்தது. குரு கிரகம் மகரத்தில் இருப்பதால் நீசம் அடைந்துவிடாது. திருவோணம் நட்சத்திரத்தில் குரு கிரகம் இருந்தால் மட்டுமே நீசம் அடையும் என்பதை தெரிந்துக்கொண்டேன். அவருக்கு குரு கிரகம் உத்திராட நட்சத்திரத்தில் இருந்ததாக ஞாபகம் இருக்கிறது.

குரு கிரகம் நீசம் அடைந்தால் கர்ப்பசிதைவு ஒரு சிலருக்கு ஏற்படும். குழந்தை பாக்கியம் கண்டிப்பாக இருக்கும். நீசம் அடைந்துவிட்டது என்று கவலைப்படதேவையில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Neecha pangam parri oru padhivu podunga.