Followers

Thursday, January 8, 2015

வீடு


வணக்கம் நண்பர்களே !
                      பொதுவாக ஒரு வாஸ்து நிபுணரை கூப்பிட்டு உங்களின் வீட்டை காண்பித்தால் அவர் ஏதாவது ஒரு குறையாவது சொல்லிவிட்டு சென்றுவிடுவார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தை சொல்லி உங்களின் வீட்டை இடிக்க சொல்லிவிடுவார்கள். 

உங்களின் வீட்டில் என்ன பிரச்சினை என்பதை இரண்டு வாஸ்து புத்தகங்களை வாங்கி நீங்கள் படித்தாலே தெரிந்துக்கொள்ளமுடியும். என்னுடைய கருத்து எல்லாம் கோவில் போல் உங்களின் வீடு இருக்கவேண்டும் என்றால் அதற்கு தான் செய்துதருவேன். கண்டிப்பாக அது வாஸ்து கிடையாது. 

பொதுவாக இந்த மாதிரி வீடுகளை ஆன்மீகவாதிகள் மிகவும் விரும்பி கட்டி அதில் குடியிருப்பார்கள். இப்பொழுது கூட என்னை தொடர்புக்கொண்டவர்கள் அதிகம் பேர் ஆன்மீகத்தில் நல்ல நிலைமையில் இருப்பவர்கள் தான் தொடர்புக்கொண்டார்கள்.

அனைவரும் இதனை விரும்பி கட்டிக்கொண்டாலும் நல்லது தான். உங்களின் வீட்டை நான் சொல்லுவது போல் அமைத்துக்கொண்டு நீங்கள் ஆன்மீகப்பயிற்சி செய்தால் மிகப்பெரிய அளவில் நீங்கள் வருவீர்கள் என்பது மட்டுமே உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: