Followers

Thursday, January 8, 2015

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                      அம்மன் செய்யும் செயலை பார்த்து நானே ஒரு சில நேரங்களில் ஆச்சரிப்படுவேன். ஒரு சில நேரங்களில் நமது தொழில் அதிபர்களின் வேண்டுதலுக்கு இணங்க இவ்வளவு தான் அவர்க்கு பணம் கிடைக்க வேண்டும் என்று நான் அம்மனிடம் வேண்டுவேன். சரியாக அந்தளவுக்கு தான் அம்மன் அவர்களுக்கு கொடுக்கும்.

தொழிலுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தப்பொழுது அதனை எப்படி செய்வது என்றே எனக்கு பலவிதத்தில் குழப்பம் ஏற்பட்டது. ஏன் என்றால் நமக்கு வரவேண்டிய பணத்தை எடுத்துக்கொள்வார்களோ அல்லது ஏமாற்றிவிட்டு சென்றுவிடுவார்களோ என்று நான் நினைத்தது உண்டு

இன்றைக்கு அந்தமாதிரி யாரும் கிடையாது. அனைவரும் நண்பர்களாக மாறிவிட்டார்கள். அதே நேரத்தில் அம்மன் மிகச்சரியாக அவர்களுக்கு வேலை செய்கிறது. ஒவ்வொருவரும் மேலை வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சரியாக என்னை கவனித்துவிடுகிறார்கள்.

ஒவ்வொருவரும் அம்மனின் அருளை நன்றாக உணர்ந்தவர்கள். அம்மனின் அருள் என்ன என்று அவர்களுக்கு உணர்த்திவிடுகிறேன். அப்புறம் ஏமாற்றுவதற்க்கே வழி இல்லாமல் போய்விடுகிறது. ஒரு வேலை நடந்துக்கொண்டு இருந்தால் அந்த வேலை உடனே நிற்க வேண்டும் என்று நான் நினைத்த அடுத்த நொடி அப்படியே அந்த வேலை நிற்க்கும்.

இதனை எதற்கு உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் ஒரு அம்மனை நீங்கள் கும்பிட்டு வந்தால் எனக்கு நடப்பது போல் உங்களுக்கு நடக்கவேண்டும். அதனை உணர்த்துவதற்க்கு தான் இதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: