Followers

Thursday, January 22, 2015

சிவ பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      சிவபூஜை செய்யச்சொல்லி வருடபிறப்பு சமயத்தில் சொல்லிருந்தேன். இதுவரை யாரும் செய்ததாக எனக்கு தெரியவில்லை. ஒரு சில நண்பர்களிடம் போன் செய்து கேட்டேன். அவர்கள் அதனை எல்லாம் செய்வதற்க்கு எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவர்களே தப்பானவர்கள் என்ற நினைப்பு இருக்கிறது. இந்த நினைப்பு இருந்தால் எப்படி அவர்கள் முன்னேற்றம் அடையமுடியும். 

ஒரு பூஜை செய்வதற்கே பயந்தால் அப்புறம் எப்படி ஆன்மீகவாதியாக மாறுவது. எந்த கடவுளும் நாம் தவறாக பூஜை செய்தாலும் அதுவே நம்மை திருத்தி நல்ல வழியில் செய்ய வைத்துவிடும். 

மந்திரங்கள் தெரியவில்லை என்று ஒரு சிலர் சொன்னார்கள். மந்திரங்களை முழுமையாக படிக்க தெரியவில்லை என்றாலும் இப்பொழுது கடைகளில் மந்திரங்கள் அடங்கிய சிடி கிடைக்கிறது. அதனை வாங்கி பிளையரில் போட்டு பூஜையை செய்துக்கொள்ளுங்கள். பல கோவில்களிலேயே பிளையரில் மந்திரங்களை ஒடவிட்டு பூஜை செய்கின்றனர்.  நீங்களும் பயப்படாமல் இந்த மாதிரி பூஜை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: