Followers

Friday, January 9, 2015

கண்டுபிடிக்க முடியாத வியாதி


வணக்கம் நண்பர்களே!
                      ஒருவருக்கு உடல்நிலை நன்றாக இருந்தாலே போதும் என்று நோய் வரும்பொழுது நமக்கு தோன்றும். நோய் தீர்ந்தவுடன் அதனை அப்படியே மறந்துவிட்டு ஆட்டம் போட ஆரம்பித்துவிடுவோம்.

மனிதனுக்கு வரும் நோயைப்பற்றி சோதிடத்தை பார்த்து நாம் முன்கூட்டியே அறிந்துக்கொள்ளலாம். ஏதாவது பரிகாரம் செய்துக்கொண்டு பெரிதாக வருவதை சிறிதாக குறைத்துக்கொள்ளலாம்.

சோதிடத்தில் ஆறாவது வீட்டை வைத்து நமக்கு வரும் நோயைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் இந்த நோய் தான் வரும் என்பதையும் சொல்லிவிடலாம். ஒரு சில நோயை மட்டும் நாம் கண்டுக்கொள்ளமுடியாது.

ஒருத்தருக்கு நோய் வந்து அதனை பரிசாேதனை செய்து இவருக்கு வந்திருக்கிற நோய் என்ன என்றே தெரியாமல் இருந்தால் அது மறைவு ஸ்தான தசாவில் இருந்து வந்தது என்று அறிந்துக்கொள்ளலாம். மறைவு வீட்டு தசா நடந்தது என்றால் வருகின்ற நோய் என்ன என்று அறிந்துக்கொள்ள முடியாது.

நோய் உடலில் இருக்கின்றது என்று கூட நமக்கு தெரியாது. அது நாள் ஆக ஆக பிரச்சினையை கிளப்பிவிட்டுவிடும். அதனால் உங்களுக்கு மறைவு ஸ்தான தசா நடந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: