Followers

Monday, February 23, 2015

சனி தசா பகுதி 2


வணக்கம்!
         சனிதசாவைப்பற்றி பார்க்க ஆரம்பித்து இருக்கிறோம்.சனி தசா என்று சொன்னவுடன் பயம் தான் அதிகம் ஒருவருக்கு இருக்கும். சனி தசா நல்லதையும் தரும். சனி கொடுத்தால் அது எந்த காலத்திலும் அழியாத செல்வமாக இருக்கும்.

இந்த காலத்தில் அப்பன் சம்பாதித்த சொத்தை மகன் அழிக்கிறான். அவன் அவன் சம்பாதித்த சொத்தை அவன் அனுபவிப்பதில்லை. யார் யாரோ அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி அழிப்பது எல்லாம் ஏதாவது ஒரு சமயத்தில் அதாவது ஏதாவது ஒரு கிரகத்தின் தசா நடைபெறும்பொழுது சம்பாதித்து இருப்பார்கள்.

ஒருவருக்கு சனி தசா நடைபெற்று அவர்கள் ஒரு இடத்தை வாங்கினால் கூட அந்த சொத்து அவர்களின் பேரக்குழந்தை காலத்தில் கூட அழியாமல் இருக்கும்.

இப்பொழுது நகரத்தில் பல இடங்களில் மூதயர்களின் சொத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சொத்து எல்லாம் அவர்களின் தாத்தா காலத்தில் சனி தசா நடக்கும்பொழுது வாங்கிய சொத்துக்களாக இருக்கும்.

சனிதசா உங்களுக்கு கெடுதல் தரும் நிலையில் இருந்தால் அந்த நேரத்தில் உங்களின் சொத்தை விற்றால் அந்த சொத்தை எந்த காலத்திலும் உங்களால் மீட்க முடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: